Friday, January 27, 2023

கணனி பற்றிய தகவல்கள்

கணனி பற்றிய தகவல்கள் 

https://www.facebook.com/reel/1155817038412175?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/542938291088532?fs=e&s=TIeQ9V

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vaz7FZziGRCe8jcTYQiquv7rjMKJpLt4VKxWSnFYmRLeyXLWk7UJDUbE3F2Vv13al&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DKeJkQoPw9QceuNcmKSdZzZYT3jBeEpbSTFNK75UjPhVqQRW94RDimvTVWwEYVrfl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02VvsrXBChzbXfppy6XibAULGCsLxYviUknH86Xj4dDkKySurWkVWR6uyh4P5tXjvNl&id=100009473808763

https://www.facebook.com/reel/1561476470960944?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/861034118506698?fs=e&s=TIeQ9V

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DKeJkQoPw9QceuNcmKSdZzZYT3jBeEpbSTFNK75UjPhVqQRW94RDimvTVWwEYVrfl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vaz7FZziGRCe8jcTYQiquv7rjMKJpLt4VKxWSnFYmRLeyXLWk7UJDUbE3F2Vv13al&id=100009473808763

https://www.facebook.com/reel/672469037584643?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/5639552489457936?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/1294813867756844?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/669037554998243?fs=e&s=TIeQ9V

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vaz7FZziGRCe8jcTYQiquv7rjMKJpLt4VKxWSnFYmRLeyXLWk7UJDUbE3F2Vv13al&id=100009473808763

https://www.facebook.com/reel/1480350235790497?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/530564715528343?fs=e&s=TIeQ9V

https://www.facebook.com/reel/653244879885140?fs=e&s=TIeQ9V

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DKeJkQoPw9QceuNcmKSdZzZYT3jBeEpbSTFNK75UjPhVqQRW94RDimvTVWwEYVrfl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02VvsrXBChzbXfppy6XibAULGCsLxYviUknH86Xj4dDkKySurWkVWR6uyh4P5tXjvNl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vaz7FZziGRCe8jcTYQiquv7rjMKJpLt4VKxWSnFYmRLeyXLWk7UJDUbE3F2Vv13al&id=100009473808763

https://www.facebook.com/reel/659963555679278?fs=e&s=TIeQ9V

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DKeJkQoPw9QceuNcmKSdZzZYT3jBeEpbSTFNK75UjPhVqQRW94RDimvTVWwEYVrfl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DKeJkQoPw9QceuNcmKSdZzZYT3jBeEpbSTFNK75UjPhVqQRW94RDimvTVWwEYVrfl&id=100009473808763

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vaz7FZziGRCe8jcTYQiquv7rjMKJpLt4VKxWSnFYmRLeyXLWk7UJDUbE3F2Vv13al&id=100009473808763




















Saturday, February 26, 2022

 உருளும் உக்ரைன் 

போர் வந்து விடும்.... வந்து விடும்.... என்று நேட்டோ நாடுகள் தம்மால் முடிந்தளவு ஆயுதங்களை உக்ரேனுக்கு விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்....! அந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொருளாதார உதவிகளை விட இந்த கருவிகளை விற்பனை செய்யும் வியாபாரம் கோலோச்சும் இன்றைய பதற்றமான கால கட்டத்தில் போர் வேண்டவே வேண்டாம் பேச்சுவார்தைகள் மூலம் சமூக நிலை ஏற்பட வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதியை தொடருகின்றேன்....

அமெரிக்காவும் ஏனைய அதன் முதலாளித்துவ சிந்தனைக் கூட்டாளிகளும் இணைந்து 1949 ஆம் ஆண்டில், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)(Nato) என்பது யு.எஸ்., கனடா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு சக்தியாக உருவாக்கப்பட்டது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக சோவியத் யூனியன் சோசலிச நாடுகளை இணைத்து வார்சோ(Warsaw) என்ற அமைப்பை உருவாக்கியது. உண்மையில் இதற்கான முன்னெடுப்பை சோவியத் யூனியன் எடுக்கவில்லை. ஏனைய சோசலிச நாடுகள் எடுத்த முன்னெடுப்பில் சோவியத் யூனியன் இதில் இணைந்து கொண்டதே வரலாறு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் அதன் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது நட்பு கொள்கை வட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஜேர்மனியின் கிழக்கு பகுதி சோவியத் ஒன்றியத்தின் சோசலிச கொள்கையின் அடிப்படையிலும் மேற்கு ஜேர்மன் அமெரிக்காவின் முதலாளித்துவ முகாமிற்குள்ளும் தம்மை இணைத்துக் கொண்டன. 

1950 களில், மேற்கு ஜேர்மனி நேட்டோவில் இணைந்து கொண்டது. மேற்கு ஜேர்மனியை எல்லையாகக் கொண்ட நாடுகள் மீண்டும் ஒரு இராணுவ சக்தியாக சோசலிச நாடுகளுக்கு எதிராக செயற்படலாம் என்ற அச்சம் எற்பட்டது. 

இந்த அச்சுறுத்தலால் அன்று சோசலிச நாடுகளாக இருந்த செக்கோஸ்லோவாக்கியா போலந்து மற்றும் கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க முயன்றன. இறுதியில், ஏழு நாடுகள் வார்சா(wasaw) ஒப்பந்தத்தை உருவாக்கி ஒன்றாக செயற்படத் தொடங்கின. 1955 இல் வார்சா(Warsaw) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வார்சா நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் சோவியத் யூனியன், அல்பேனியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகியவை வார்சா ஒப்பந்த அமைப்பில்

(Warsaw Treaty Organization) கையெழுத்திட்டு இணைந்து கொண்டன.

வார்சா ஒப்பந்தத்தின் (Warsaw Pact) உறுப்பினர்கள் தங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் ஒருவரையொருவர் பாதுகாப்பதாக உறுதியளித்தாலும், அதன் உறுப்பினர்களின் உள் விவகாரங்களில் தலையிடாததை வலியுறுத்தி, கூட்டு முடிவெடுப்பதில் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், சோவியத் யூனியன் செல்வாக்கு அதிகம் இவ் அமைப்பிற்குள் இருந்தது தவிர்க முடியாத வரலாற்றுப் போக்காகும். 

எவ்வாறு நேட்டோ நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு போக்கு அதிகம் உள்ளதோ அதனைப் போன்றதாகவே இங்கும் இருந்தது.

வார்சா உடன்பாடு 36 ஆண்டுகள் நீடித்தது. அந்த சமயத்தில், நேட்டோ அமைப்புக்கும் வார்சா ஒப்பந்த அமைப்பிற்கும் நேரடியாக மோதல் இருக்கவில்லை. ஆனால் பனிப்போர் அவற்றிற்கு இடையே தொடர்ந்து கொண்டே இருந்தன.

குறிப்பாக சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்த்தில் இந்தப் பனிப் போர் இருந்தது. அதாவது போரில் அமெரிக்காவும்... அதன் தலமையிலான நேட்டோ(Nato)வும் சோவியத் யூனியனும் அதன் தலமையிலான வார்சா(Warsaw) நாடுகளும் நேரடியாக (மோதலில்) ஈடுபடாமல் தமது ஆதரவு சக்திகளுக்கு போர்களத்தில் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்கிவித்தனர். 

சண்டையற்ற இராணுவ சம பலத்தை பேணுதல் இதனைத்தான் பனிப் போர் என்று அழைத்துக் கொண்டனர் அரசியல் ஆய்வாளர்கள்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு 1991 முன்பு இல் - பிராகாவில் அந்த அமைப்பு(Warsaw) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

கிழக்குத் (ஐரோப்பிய, ஆசிய)தொகுதியில் அரசியல் கிளற்சிகள் போலந்தில் 1989 இல் தொடங்கியது. இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிற புரட்சிகளைத் தூண்டியது, கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் மீண்டும் இணைத்த பெர்லின் சுவர் அழிக்கப்பட்டது. (அதிகாரப்பூர்வ மீள் இணைப்பு சோசலிச கிழக்கு ஜேர்மனி முதலாளித்துவ மேற்கு ஜேர்மனி இடையே அக்டோபர் 3, 1990 இல் ஏற்பட்டு ஜேர்மன் என்ற ஒரே நாடு உருவானது). 

இதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியனின் மாநிலங்களில் ஒன்றியமாக செயற்படுதல் என்பதற்கு எதிராக தனியாக பிரிந்து செல்லல் என்ற போக்கு வலுவடைந்து சோவியத் யூனியன் ஒரு நாடாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக பலவீனமடைந்தது.

இதற்கான எல்லா வகையான கொல்லை வழி குழிப்பறிப்புகளையும் நேட்டோ நாடுகள் செய்தன. சோவியத்தில் நாடுகள் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டின் மாநிலங்கள் பிரிந்து செல்லாமல் கவனித்துக் கொண்டன. 

கூடவே தனித்தனியாக இருந்த இரு வேறு வேறு கருத்தியலுடன் ஆட்சி நடைபெற்ற கிழக்கு மேற்கு ஜேர்மனிகளை இணைக்கவும் செய்தன என்ற அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சோவியத் ஒன்றியம் டிசம்பர் 31, 1991 சுய விருப்பத்தின் அடிப்படையில..? தனித் தனியாக பிரிந்து 15 நாடுகள் உருவானது. அவை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த 15 நாடுகள்: ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான்.

இதே போன்ற செயற்பாடு செக்கோசிலாவிக்யாவிலும் தொடர்ந்த காலங்களில் நடைபெற்றது.

சோவியத் ஒன்றியத்தின் பல நாடுகள் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனி நாடுகளாக உருவான பின்பு பல பிரச்சினைகளை எதிர்கொண்டன. 

தமது நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிறுவுவதற்கு அப்பால், தமது நாடுகளை சந்தைப் பொருளாதாரங்களுக்கு மாறுவதற்கும், தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மக்கள் தொகை வீழ்ச்சியைச் சரிசெய்வதற்கும், அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் மதங்களை நிறுவுவதற்கு அல்லது மீண்டும் நிறுவுவதற்கும் போராடின. 

சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றதன் விளைவாக பல சோவியத் நாடுகள் இன்னும் கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கின்றன.

சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக... நம்பிக்கையாக... அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.

சோவியத்தின் இறுதி அதிபர் மிகைல் கோப்பச்சேவ் பதவி ஏற்கும் வரை இது தொடர்ந்தது. அவர் பதவி ஏற்ற பின்பு சோவியத் யூனியனில் உருவாக்கிய பெரெஸ்ட்ரோயிகா(Perestroika - இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்) (ரஷ்யன் 'மறுசீரமைப்பு') மற்றும் கிளாஸ்னோஸ்ட்(Glasnost - இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்)(ரஷ்யன் 'திறந்த வெளி') என்ற சீர்திருத்தங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சோவியத் ஒன்றியத்தில் உள்ள நாடுகள் தமது இறையாண்மையை பயன்படுத்தி பிரிந்து செல்லாம் என்ற அரசியல் சுதந்திரம் தனியாக 15 நாடுகள் உருவாவதற்கு வாய்பை ஏற்படுத்தின.

கோப்பச்சேவ் தலமையிலான சோவியத் யூனியன் மேற்கு நாடுகளுடன் அதிககளவில் பேச்சுவார்தையில் ஈடுபட்டது. கோப்பசேவ் பிரிட்டிஷ் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் முக்கிய உறவுகளை உருவாக்கினார் மார்கரெட் தாட்சர், மேற்கு ஜெர்மன் தலைவர் ஹெல்முட் கோல் மற்றும் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன். 

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள்    விலக்கப்பட்டன. சோவியதிற்குள் சரிந்து வரும் பொருளாதார நிலமைகளை கரு

த்தில் கொண்டு சீர் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றார்.

கூடவே ஐக்கியப்பட்டு ஒன்றியமாக சோசலிச கொள்கையில் பலமாக பயணித்துக் கொண்டிருந்த சோவியத்தை வீழ்த்துதல் என்ற அமெரிக்கா அதன் கூட்டமைப்பு நேட்டோவின் பொறி கோபபர்சேவ் இன் நாடுகளின் இறையாண்மையை பிரிந்து செல்வதை அங்கீகரித்தல் என்ற அதிக தாரளவாதம் என்று இரண்டுமாக சோவியத்யூனியன் பல நாடுகளாக சிதறுவதறகு வழி வகுத்துவிட்டது. இன்து அவை தமக்குள் மோதும் நாடுகளாகவும் முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கின்றன. 


'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள் இங்கு ஊர் பலவாக பிரிந்ததினால் ஆயுத விற்பனைக் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகி இருக்கின்றது.

இந்த சோவியத் யூனியனின் சிதறல் ஆரம்பமான போது... சோவியத் யூனியன் தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக செயற்படுவது என்று சோவியத் ஒன்றியத்தின் 9 நாடுகள் ஆதரவாகவும் 6 நாடுகள் எதிராகவும் என்ற நிலமை ஏற்பட்ட போது பொறிஸ் யெல்சன் போன்ற ரஷ்சிய தலைவர்களின் சித்து விளையாட்டினால் பெரும்பான்மை அடிப்படையிலான முடிவு என்ற விடயம் அடிபட்டு ஒன்றாக செயற்பட முடியாத நிலமையே இறுதியில் ஏற்பட்டது. 

இதற்கு பின்புலமாக மேற்குலக நாடுகள் கண இடைவெளிகள் இன்றி செயற்பட்டனர் என்பது அன்றைய கால கட்டத்து அரசியல் நகர்வுகள் மேற்குலக ஊடகங்களின் ஒரு தலைபட்சமான பிரச்சார வாடையிலான செய்திகள் நிறுவி நின்றன.

தற்போதைய நிலையில் சீனாவின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும் அடுத்த பகுதிகளில் பார்ப்போம்



நீண்ட நாட்களாக தனி நாடு அமைக்க போராடி வரும் உக்ரைனின் கிழக்கே அமைந்த டொன்பாஸில், ரஷ்ய மொழி பேசும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் ஆகியவற்றை தனி நாடுகளாக அங்கீகரித்து அமைதியை நிலைநாட்ட அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளை அனுப்பிவிட்டார்.

உக்ரேனுக்கு மேற்காக உக்ரேனின் தலைநகர் கீவ்(Kiev) இற்கு அண்மையாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடானா பெலாறஸ்(Belarus) இல் இருந்து உக்ரேனுக்குள் படைகள் புகுந்துவிட்டன.

உக்ரேனின் தெற்கு பகுதியில் கருங்கடலுக்கு அருகில் அமைந்த கிறீமியா(Crimea)வில் இருந்து உக்ரோனுக்குள் தனது படைகளை நகரச் செய்தும் விட்டது ரஷ்யா. 2014 இல் உக்ரேனினல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ரஷ்ய சார்பு அரசை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகள் சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்ய மொழி பேசும் கிறீமியாவை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

முழு உக்ரேனையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்தும் விட்டது.

நேட்டோ அமைப்பில் இணையாது சுதந்திரமான நாடாக செயற்படுங்கள் எமது எல்லை நாடாக நட்பு நாடாக என்பதை மீறி மேற்குலகின் வேலைத்திட்டங்களுக்கு அமைய படைக் குவிப்புகளை மேற்கொண்ட உக்ரேனுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி செயற்படத் தொடங்கிவிட்டது ரஷ்யா.

வழமை போல் உக்ரேனுக்கு எதிரான யுத்தம் ஆரம்பித்தவுடன் உக்ரேன் நாட்டிற்கு ஆதரவான குரல் என்றதற்குள் தம்மை சுருட்டிக் கொண்டன நேட்டோ அமெரிக்க நாடுகள்.

இந் நிலையில் ஏற்கனவே எழுதிய இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்குள் நுளைகின்றேன்... (முதல் இரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள் அதனை வாசியுங்கள் அப்போதுதான் தொடர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்)

முதலில் பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது. தொடர்ந்து இவை தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த சில  மாநிலங்களு அதிகாரங்களை பரவலாக்க மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக ஒற்றுமையாக செயற்பட எடுத்த முயற்சிகள் கை கூடவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்துகொண்டன. 

கூடவே சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடைபெற்றது.

சோவியத்தில் இருந்து பிரிந்து உருவான மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச் சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான், அஜர்பைஜான், ஆர்மீனியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் இந்த மகா நாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

இதனால் சோவியத் யூனியன் என்று மாபெரும் தலைவரால் உருவாகப்பட்ட சோசலிச ஒன்றியம் டிசம்பர் 8, 1991ல் கலைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் அதிபரான கோர்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25, 1991 ம் தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

கோப்பச் சேவ் இன் இந்த பொருளாதாரச் சீர்திருத்தம், பிரிந்து செல்வது வரையிலான அதிகாரப் பரவலாக்கம் தாராளவாதத்தினால் ஏற்பட்ட இந்த உடைவிற்கு எதிராக செயற்பட்ட எட்டு கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். தமது முயற்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

இவ்வாறுதான் சோவியத்தின் உடைவு ஏற்பட்டது

இன்று யுத்தத்தின் மையப் புள்ளியாக இருக்கும் உக்ரேன் 1991 இன்று வலிந்து உடைக்கப்பட்ட சோவியத் யூனியனின் ரஷ்யாவிற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடு.

சோவியத் அதிபர் கோப்பச் சேவின் தாராளவாதம் நாடுகளுக்கு இன்னும் சுதந்திரம் வழங்குதல் என்ற புதிய கொள்கைகளுக்கு அப்பால் அன்றைய அமெரிக்க அதிபர் றொனால் றீகன் செயற்பாடுகளினால் சோவியத் என்ற மாபெரும் சோசலிச சாம்ராஜ்யம் அன்று உடைந்தது.

இதில் ரஷ்யாதான் சோவியத்தின் மிகப் பெரிய நாடாகவும் சோவியத்தின் தொடர்ச்சியாகவும் உணரப்படும் நாடு. இதில் உக்ரேன் அதற்கு அடுத்த படியாக பேசப்பட்ட நாடு. சோவியத் யூனியனின் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து வெளிநாட்டு அமைச்சர்தான் ஷிவநாட்சே தான் உக்ரேனின் முதல் அரசுத் தலைவராக பொறுப்பெடுத்தார். 

கடந்த 30 வருடங்களாக இந்த நாடுகள் சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட சோசலிச கருத்தியலை தொடர்ந்தும் தமது ஆட்சி அதிகாரத்தில் காவிச் சென்றனவா என்பதற்கு பதிலாக இல்லை என்று கூறினாலும் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை இந்த நாட்டு மக்களிடமும் கூடவே கம்யூனிச் சிந்தாத்தமான சமத்துவக் கொள்கைகளும்  அந்த நாட்டு மக்களிடம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இது அண்மைக்கால்களில் இளைஞர்களிடம் அதிகம் உருவாகி வருவதை செய்திகள் கூறியும் நிற்கின்றன.  அரசுகளிடம் இந்த அரசியலுக்கான செயற்பாடுகள்  அதிகம் இருக்கவில்லை.

பொறிஸ் ஜெல்சன் ரஷ்யாவின் தலமைப் பொறுப்பை எடுத்தார். பொறிஸ் ஜெல்சன் அமெரிக்காவின் விருபத்திற்கு ஆடுபவராகவும் கூடவே அவரின் தனிப்பட்ட நடவடிக்கையினாலும் சோவியத்தின் விம்பத்தை அதனைத் தொடர்ந்த ரஷ்யாவின் அடையாளத்தின் உலக அரங்கில் ரொம்பவும் தாழ்நிலையிற்கு கொண்டு சென்றது வரலாறு. 

சோவியத்தின் உடைவினால் உருவான நாடுகள் அனேகம் ரஷ்யாவின் மேற்கு கரையோரங்களில் தான் அதிகம் அமைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேட்டோ, வார்சோ என்று முதலாளித்துவ முகாம் சோசலிச முகாம் என்றிருந்து உலகம் முதலாளித்து முகாம் என்று ஏகபோகமாக தன்னை கட்டமைத்துக் கொண்டது. 

அமெரிக்க முதலாளித்துவம் இனி உலகில் ரஷ்யா எழுத்து வர முடியாது.... ( அதுதான் முதல் அத்தியாயத்தில் கூறிய 'சிங்கன் செத்தான்" கதை) சீனாவும் என்னுடன் நட்பாக இருக்கின்றது என் செயற்பாட்டை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று தனது சொல்லுக்கு கட்டுப்படாத இணைய மறுத்த அனைவர் மீதும் பொருளாதாரத் தடை போன்ற மிரட்டல்களால் தனது கைக்குள் கொண்டு வந்தது. இந்த வரலாற்றை நாம் 1990 களில் இருந்து அண்மைய காலம் வரை அவதானிக்க முடியும்.

இதற்கு மாற்றீடாக ஐரோப்பிய யூனியன் ஈரோ(Euro) என்று கொண்டு வந்தாலும் தனது மிக நெருங்கி சகாவான பிரித்தானியா மூலம் அதற்கும் முக்கணாங்கயிறு போட்டது தற்போது பிரித்தானியா பொது நாணயத்திற்குள் வராமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தும் போய்விட்டது. வேறு வழியில்லாமல் ஐரோப்பிய யூனியனும் நேட்டோவின் இன்னொரு தம்பியாகி அதனுடன் பிணைந்து இணைந்துவிட்டது. இது வர்க்கக் குணாம்சத்தின் வெளிப்பாடுகள்.


இதேபோல் இந்தியா தென் ஆபிரிக்கா பிரேசில் சீனா ரஷ்யா போன்ற நாடுகளால் உருவான பிறிக்ஸ்(BRICS) என்ற கூட்டமைப்பும் ஒரு அளவிற்கு மேல் வளர விடப்படவில்லை அமெரிக்க டாலரின் செயற்பாடுகளால்.

குறிப்பாக அமெரிக்க டாலருக்கு மாற்றீடாக உலக சந்தையில் நாணய பரிமாற்றத்தை வேறு ஒரு நாணயத்தினால் மாற்றீடு செய்யப்படுவதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. சீனாவும் பொருளாதார வல்லரசாக தன்னை வளர்த்துக் கொண்டாலும் தனது யென் ஐ பொது நாணயமாக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் சிரியா இல்லாமல் செய்ய புறப்பட்ட அமெரிக்காவையும் அதன் நட்பு நேட்டோ செயற்பாடுகளையும் அவர்களால் ஒரு காலத்தில் உருவாக்கி வளர்த்து விடப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் செயற்பாடுகளின் முதுகெலும்பை உடைத்துக் காட்டி 'சிங்கன் செத்தான்' என்று கோஷம் போட்டவர்களுக்கு பதில் சொல்ல விளைந்திருக்கின்றது ரஷ்யா சில வருடங்களுக்கு முன்பு. 

அதன் தொடர்ச்சியைதான் இன்று உக்ரேனில்.....

தடைகளும், படைகளும் விடைகளை கொடுக்காது... போரை நிறுத்தாது... சமாதானத்தை ஏற்படுத்தாது.... மாறாக தடையற்ற பேச்சுவார்த்தைகள் விட்டுக் கொடுப்புகள்தான் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தும். மனித குலம் கடந்து வந்த வரலாறு அவ்வாறானது. அந்த சமாதானத்தை வேண்டியே தொடர்கின்றேன்..

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையிற்கு தயார். மேற்குலக நாடுகளை நம்பினோம்... நேட்டோ நாடுகளை நம்பினோம்.... நாம் தனித்து விடப்பட்டுள்ளோம்.... நேட்டோ அமைப்பில் சேருங்கள் என்று சொன்ன நாடுகள் எல்லாம் எங்கே போய்விட்டன. இந்தியா தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் - இது உக்ரேன் தலைவர் ஒரு நாள் போர் முடிவின் பின்பு மனம் வருத்தி வெளியிட்டுள்ளது அழைப்பு.

ஆயுதங்களை கைவிட்டுவிட்டு சரணடையத் தயாராக வாருங்கள் பேசுவதற்கு குழுவை அனுப்புகின்றோம் - இது ரஷ்யா

சுதந்திரமான நாடாக யார் பக்கம் சாராமலும் சிறப்பாக ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பக்கம் சாராமல் செயற்படுங்கள் என்று தனது கொல்லைப் புறத்தில் இருக்கும் உக்ரேனுக்கு 'ஒரு காலத்தில் எம்முடன் ஒன்றாக பயணித்த நீங்கள்.." என்பதை கருத்தில் எடுக்காது நேட்டோவின் நகர்வுகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் என்பதையும் காதில் வாங்காது நேட்டோவை நம்பிய உக்ரேனை இன்று கைவிடப்பட்ட? நிலையில்.... 

இதனை உக்ரேன் தலைவரே போர் ஆரம்பித்த ஒரு நாளில் தெரிவிக்கும் நிலமை நேட்டோ நாடுகளின் நம்புபவர்களுக்கான செய்திகளை சொல்லி நிற்கின்றது.

ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே தனியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பகுதிகளையுமே புடின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருக்கிறார். இதன் மூலம் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையேயான பூகோள அரசியல் போட்டி, கிழக்கு ஜரோப்பாவில் இரண்டு புதிய தேசங்கள் தோன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருக்கும் நிலையில்....

இந்த யுத்தம் பற்றி ரஷ்ய அதிபர் கருத்து தெரிவிக்கையில்...

'உக்ரைன் அதிகாரத்தை அமெரிக்காவின் பொம்மை ஆட்சி” என்று வர்ணித்தார். 'ஒரு தேசத்துக்கான எந்தப் பண்புகளையுமோ அடிப்படைகளையுமோ கொண்டிருக்காத அந்த நாடு நேட்டோவின் யுத்த மேடையாக மாறியிருக்கிறது' என்றும் குற்றம் சுமத்தினார். 'நவீன உக்ரைன் கம்யூனிஸ ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட தேசம். ஆனால் 2014 உருவான அரசு அதன் ரஷ்யத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு அங்கு ஊழல் மிக்க பயங்கரவாத ஆட்சி கட்டியெழுப்பியுள்ளது' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடியாக..

புடினின் தனிநாட்டு அங்கீகாரப் பிரகடனத்தை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். எவருடைய நகர்வுகளும் உக்ரைன் நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிப்பவையாக இருக்க வேண்டும் என்று ஐ. நா. சபை கூறியிருக்கிறது.

சர்வதேச சட்டங்களையும் ஏற்கவே உக்ரேன் ரஷ்யா ஆதரவுடன் தனிநாடு அமைக்க போராடி வந்த கிளர்சியாளர்கள் இடையிலான 'மின்ஸ்க்' உடன் படிக்கையையும் மீறி மொஸ்கோ உக்ரைனின் ஒரு பகுதிக்குத் தனி நாடுகளுக்கான அங்கீகாரத்தை அளித்திருப்பதால் அதன் மீது தடைகளை அறிவிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

ஆனால் மேற்குலகின் தடைகள் எதனையும் மொஸ்கோ கணக்கில் எடுப்பதாக இல்லை. இதற்கான காரணங்களை விரிவாக தொடர்ந்து அடுத்த பகுதிகளில் பார்ப்போம். 30 வருடங்களாக ரஷ்யா மீது மேற்குலகம் அதிக தடைகளை விதித்தே இருக்கின்றது.

ரஷ்யாவும் பதிலாக தனது வான் பறப்பு பிரதேசத்தில் நேட்டோ நாடுகளின் விமானங்கள்(சிவில் விமானங்கள்) பறப்பதற்கு தடை விதித்திருக்கின்றது

இந்நிலையில்தான் 'செத்தான் சிங்கன்" என்ற கூச்சலுக்கு பதிலடியாக சிரிய உள் நாட்டு யுத்தத்தில் சிரிய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க செயற்பட்ட பின்பு தற்போது மீண்டும் எழுந்து வருகின்றது ரஷ்யா.

குண்டுகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் நாம் தயார் இல்லை. ஆனால் எதிர்காலத்திலும் குண்டுகளுடன் நாம் உங்கள் நாட்டில் முகாம் அமைக்க அனுமதி தாருங்கள் என்பது போன்ற கூட்டமைப்பாகிப் போனது நேட்டோவின் தற்போதைய செயற்பாடுகள். 

25 வருடங்களுக்கு முன்பு சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போது கிடைத்த கசப்பான இழப்புக்களுடன் கூடிய அனுபவங்கள் தரையினூடு தமது படைகளை நகர்த்துவதை தவிர்த்து வருவதான அமெரிக்க தலமையிலான நேட்டோ நாடுகளின் செயற்பாடுகள் தற்போதும் தொடர்வார்கள் என்றே நம்பப்படுகின்றது.

தடைகளையும், கண்டனங்களையும், தமது நாடுகளுக்குள் நிதி திரட்டி உதவி செய்வதாகவும் கூறிக் கொள்ளல்கள் மட்டும் ஒரு நாட்டில் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிவாரணமாக அமைய மாட்டாது. மாறாக யுத்தத்தை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகளை அடைவதற்குரிய இராஜதந்திரி அணுகுமுறைகளை இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டும். 

இதே போன்ற அனுபவங்களை ஈழத் தமிழராகிய நாங்களும் அனுபவித்தவர்கள் ஏன் தற்போது குண்டுகள் அற்ற நிலையிலும் அவை தொடர்ந்தும் வருகின்றன. இந்த வலிகள் எவ்வாறானவை என்பது ஒவ்வொரு சமான்ய மக்களுக்கும் தெரியும் யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே.

கடந்து 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா நேட்டோவின் ஆதரவுடன் படையெடுத்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டால் தலை சுற்றும்.

இத்தனைக்கும் படையெடுத்து ஜனநாயகத்தை... நல்லாட்சியை.... உருவாக்கப் போகின்றோம் என்று சென்ற நாடுகளின் இன்றைய நிலையை நாம் விபரிக்க தேவை இல்லை. அந்த நாடுகளின் பட்டியலை இந்தப் பதிவின் புகைப்படமாக இணைத்துள்ளேன். அவற்றின் நிலமைகளை ஆராய்ந்தால் நிலமைகள் புரியப்படலாம்.

அண்மைய காலத்து உதாரணங்களாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் அமைந்த சோசலிச அரசிற்கு ஆதரவாக அங்கிருந்த சோவியத் படைகளை அமெரிக்காவால் உருவாக்கிய முஹாஜிதீன்களைக் கொண்டு விரட்டி அடிக்கப்பட்டது. அவ்வாறுதான் உலகம் நம்பியது.

பின்பு முஹாஜிதீன்களில் ஆட்சிக் காலத்தில் இரட்டைக் கோபுர தாக்குதல் சூத்திரதாரி பின் லாடனை பிடிப்பதற்கு என அங்கு சென்ற அமெரிக்க நேட்டோ படைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நின்று எல்லா சங்காரமும் செய்து கடந்த வருடம் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற கணக்காக வெளியேறிய ஆப்கானின் இன்றைய நிலை என்ன...? நஜிபுல்லா காலத்து ஆட்சியை விடவா சிறப்பாக இருக்கின்றது..?

ஈராக்கிலும் இதே நிலை. இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக அங்கே புகுந்து இன்றுவரை அங்கு இரசாயன ஆயுதங்கள் இல்லை என்றாகிப் போன அப்பா, மகன் என் 'புஷ்" செயற்பாடுகளினால் சின்னாபின்மாகிப் போனதுதுதான் ஈராக்கின் இன்றைய நிலமை. கூடவே சதாம் குசைனை தூக்கிலும் தொங்கவிட்டார்கள். இன்று சதாம் குசைன் ஆட்சிக் காலத்தை விடவா சிறப்பாக இருக்கின்றது அங்கு.. வாழ்க்கை.

லிபியாவிற்குள் ஜனநாயகத்தை உருவாக்குகின்றோம் என்று புகுந்தவர்கள் குடிமனை, கல்வி, மின்சாரம் போன்று சகல அடிப்படை தேவைகளையும் இலவசமாக வழங்கி ஆட்சி செய்த கடாபியை மதகின் கீழ் இருந்து இழுத்து வந்து சுட்டுக் கொன்றுவிட்டு இன்று லிபியர்களே பல்வேறு சிற்றரசர்களாக தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலமையில் ரொம்பவும் சீரழிந்து போய் இருக்கின்றனர். கடாபி காலத்தை விடவா தற்போது அங்கு வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிலர் கூறுவது போல் ஆமை புகுந்த வீடாகிப் போனது போல் நேட்டோ படைகள் புகுந்த நாடுகள்

இன்னும் சற்று பின்னோக்கி சென்றால் மார்சல் டிட்டோ அணிசேரா அமைப்பை உருவாக்கி நாம் நேட்டோவும் இல்லை வார்சோவும் இல்லை என்று வாழ்ந்த யூக்கோஸ்சிலாவியா என்ற நாட்டை அமெரிக்க தலமையிலான நேட்டோ படைகளை அனுப்பி உள்நாட்டுக் கலகத்தை அடக்குகின்றோம் இன அழிப்புகளை தடுக்கின்றோம் என்று சென்று இன்று அந்நாடு எட்டு நாடுகளாக துண்டாடப்பட்டு தமக்குள் முட்டி மோதும் வறிய நாடுகளாக தத்தளிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமது அணிக்குள் வாருங்கள் என்று உக்ரேனில் ஆட்சி  மாற்றத்தை 2014 ஏற்படுத்தி சோவியத்தின் முன்னாள் நாடுகளின் ஒன்றான ஜோர்ஜியாவைப் போல் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற நிலையில் எற்பட்ட யுத்தம் முன்னைய சகோதர்களை இன்று குண்டுகளை பரிமாறி தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலை ரொம்பவும் விமர்சனத்திற்குள் உள்ளாக்கி இருக்கின்றது. வேதனையாக இருக்கின்றது.

இந்த நிலையில் நான்காவது பாகத்தில் வரலாற்றை தொடர்கின்றேன்.... 

'சிங்கன் செத்தான்' என்று அமெரிக்காவால் 1990 களில் நம்பப்பட்ட ரஷ்யா பல பொருளாதாரத் தடைகள், உடைவுகள், முட்டுக் கட்டைகளை தாண்டி 30 வருடங்களில் அமெரிக்காவை கேள்வி கேட்கும் வகையில் இன்னோர் முகாமாக எழுந்து நிற்கின்றது இன்று.

சோவியத்தின் இறுதிக் காலத்தில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இருந்த சீனாவும் தற்போது அணி மாறி ரஷ்யாவின் பக்கம் நெருங்கி வந்துள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவின் அண்மைய செயற்பாடுகளில் இரட்டைக் குழத் துப்பாக்கி போல் செயற்படுகின்றது சீனா.

இதனை நாம் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் போரை நிறுத்தியது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்தியது என்பவற்றில் கண்டோம். இன்று உக்ரேனின் விடயத்திலும் அவ்வாறான நிலைப்பாட்டை சீனா எடுத்த நிலையில் இந்தியாவும் இதனை ஒத்த முடிவை எடுப்பதாகவே உணர முடிகின்றது.

சோவியத் யூனியனின் உடைவு காலத்தில் அமெரிக்காவின் நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட முக்கிய உடன்பாடு தனது முன்னாள் ஒன்றிய நாடுகளை நேட்டோவின் அமைப்பில் இணைக்கக் கூடாது என்பது இதனை தொடர்ந்து 30 வருடங்களாக நேட்டோ நாடுகள் மீறியே வருகின்றன. இதன் ஒரு முக்கிய முட்டுச் சந்தில் தற்போது உக்ரேன் அமெரிக்கா ரஷ்யா

Thursday, September 2, 2021

அன்னை திரேசா மீதான ஒரு மாற்றுப்பார்வை

 அவர் ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார் அனால் பல நூற்றாண்டுகளாக ஏழைகளுக்கு சேவை செய்யப்பட்டு தான் வருகிறது, வறுமை உலகில் இருந்து இதுவரை மறைந்த பாடில்லை. ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் வறுமை/ஏழ்மை உலகில் இருந்து மறந்துவிடப்போவதில்லை இன்னும் சொல்லப்போனால் இந்த மொத்த சமூகமும் இருப்பதே ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் தான். தங்களை முற்றிலும் நிராகரித்துவிட்டனர் என்ற உணர்வு எழாமல் இருக்க ஏழைகளுக்கு ஏதோ ஒரு வழியில் சேவையாற்ற வேண்டும். இல்லையெனில் பழிவாங்கும் உணர்வு அவர்களிடத்தில் பலமாக உருவெடுக்கும், காட்டுமிராண்டிகளாக மாறுவர், கொலைகாரர்களாகக் கூட மாற நேரிடும். இந்த சமுதாயம் அவர்களுக்காக, அவர்கள் பிள்ளைகளுக்கு, முதியோர்களுக்கு, விதவைகளுக்கு நிறைய உதவி செய்துள்ளது என்று அவர்களை ஆறுதல்படுத்துவது நல்லது – இது ஒரு “நல்ல” சமுதாயம்.

எனவே, ஏழைகளை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி சம்பாதித்த அதே மக்கள் இவரது (தெரேசா) மத போதக பணிக்காக நன்கொடை அளிக்கின்றனர். அன்னை தெரேசாவின் மிஷனரி பணி தொண்டு/கருணை/ஈகை சார்ந்த பணி -“Missionaries of Charity” என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் ஏழை மக்களுக்கு உணவளிக்கிறார். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? அந்த பணத்தை யார் நன்கொடையாக தருகிறார்கள்?
1974 ஆம் ஆண்டு போப்பாண்டவர் தெரேசாவுக்கு கேடில்லேக் (Cadillac) கார் பரிசாக வழங்கினார். அதை உடனே அவர் விற்றுவிட்டார். அன்னை தெரேசாவின் கார் என்பதால் அதிக விலை குடுத்து வாங்கப்பட்டது, அந்த பணம் ஏழைகளுக்கு சென்றது. எல்லோரும் பாராட்டினார், அனால் என் கேள்வி, அந்த கேடில்லேக் கார் முதலில் எங்கிருந்து வந்தது? போப்பாண்டவர் அதை உருவாக்கவில்லை, அவர் மாயாஜாலம் எதுவும் செய்யவில்லை! கேடில்லேக் காரை தானமாக தருமளவுக்கு பணம் இருப்பர் ஒருவரிடம் இருந்து தான் அது வந்திருக்க வேண்டும். மேலும் போப்பாண்டவர் உலகில் வேறு எவரையும் விட அதிகமாக பணம் வைத்திருக்கிறார். அந்த பணம் எங்கிருந்து வருகிறது?
அந்த பணத்தில் இருந்து சிறிதளவு, மொத்த பணத்தில் 1% கூட இருக்காது, மட்டும் Missionaries of Charity மூலம் ஏழைகளுக்கு செல்கிறது. இந்த நிறுவனங்கள் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்கின்றன; பணக்காரர்களுக்கு சேவை செய்கின்றனர் ஏழைகளுக்கு அல்ல.
மேலோட்டமாக பார்க்கும்போது அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர் – ஆனால் அடிப்படையில் மறைமுகமாக அவர்கள் பணக்காரர்களுக்கு சேவை செய்கிறார்கள். இவர்கள் ஏழைகளின் உள்ளத்தில் “இது ஒரு நல்ல சமுதாயம், இது மோசமான சமுதாயம் அல்ல, நாம் அதற்கு எதிராக போராட கூடாது…” என்ற உணர்வை பதித்துவிடுகின்றனர்.
இந்த மிஷனரிக்கள் ஏழைகளுக்கு நம்பிக்கை அளிப்பார்கள். மிஷனரிகள் அங்கு இல்லை என்றால், அந்த ஏழை மக்கள் மிகவும் நம்பிக்கையற்றவராக மாறிவிடுவர், அந்த நம்பிக்கையினமையால் கலகம் உருவாகி புரட்சி வெடிக்கக்கூடும்.
இப்போது, நான் அவரை விமர்சித்துள்ளேன், அவருக்கு நோபல் பரிசு கொடுத்திருக்க கூடாது என்று கூறினேன், அவரை நான் புண்படுத்தி விட்டேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார் (“குறிப்பரை: நோபல் பரிசு.”):
மேலோட்டமாக பார்க்கும்போது அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர் – ஆனால் அடிப்படையில் மறைமுகமாக அவர்கள் பணக்காரர்களுக்கு சேவை செய்கிறார்கள்.
இந்த நோபல் என்ற மனிதன் உலகிலேயே மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவன். முதல் உலகப்போரில் இவனது ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. உலகிலேயே மிக பெரிய ஆயுத தயாரிப்பாளனாக இருந்தவன். முதல் உலக போரின் வாயிலாக பெருமளவு பணத்தை சம்பாதித்தான். கோடிக்கணக்கில் மக்கள் இறந்தனர் – மரணத்தை உற்பத்தி செய்பவனாய் விளங்கினான். நோபல் பரிசுகள் அவன் சம்பாதித்த பணத்தின் வாயிலாக கிடைத்துக்கொண்டிருக்கும் வட்டியை மட்டும் கொண்டே வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு பணத்தை சம்பாதித்து வைத்துள்ளான். ஒவொரு ஆண்டும் டஜன் கணக்கில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. எவ்வளவு பணத்தை இவன் விட்டு சென்றுள்ளான்? எங்கிருந்து இந்த பணம் வந்தது? நோபல் பரிசுகளுக்கு வழங்கப்படும் பணத்தை போல ரத்தக்கறை படிந்த பணத்தை உலகில் வேறெங்கும் காணமுடியாது
இப்போது இந்த நோபல் பரிசு பணம் Missionaries of Charityக்கு சென்றுள்ளது. இந்த பணம் போரின் வாயிலாக, ரத்தத்தின் வாயிலாக வந்தது; கொலை, மரணம் வாயிலாக வந்த பணம். இப்போது அப்பணம் சில நூறு அனாதைகள், ஏழாயிரம் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறது. – கோடிக்கணக்கில் கொன்று ஏழாயிரம் பேரை உண்ணவைக்கிறது; சில அனாதைகளை வளர்த்து பல கோடி அனாதைகளை உருவாகுகிறது! இது ஒரு விசித்திரமான உலகம். என்ன வகையான கணக்கு இது? முதலில் கோடிக்கணக்கான அனாதைகளை உருவாக்கி பிறகு சில நூறு அனாதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மிஷனிருக்கு அனுப்பி வைப்பது!
அன்னை தெரேசாவால் நோபல் பரிசை மறுக்க முடியவில்லை.. பாராட்டப்படவேண்டிய ஆசை, உலகில் மரியாதைக்குரிய ஒரு ஆசை. நோபல் பாரிசு உங்களுக்கு உலகில் மிகப்பெரிய அளவில் மரியாதையை ஈட்டித்தரும். அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.
ஜான்-பால் சர்ட்ரே (Jean-Paul Sartre ) அன்னை தெரேசாவை விட சிறந்த ஆன்மீகவாதியாக காணப்படுகிறார் ஏனென்றால் அவர் அந்த பரிசை பெற மறுத்துவிட்டார், அந்த பணத்தை பெற மறுத்துவிட்டார், அதன் மூலம் தனக்கு கிட்டக்கூடிய மரியாதையை மறுத்துவிட்டார். அதற்கான காரணம்?அவை அனைத்தும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தின் மூலம் வருகிறது. – ஒன்று. இரண்டாவதாக, அவர் கூறியதாவது, ” நான் எந்தவித மரியாதையையும் பித்து பிடித்த இந்த சமூகத்தில் இருந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன். பித்து பிடித்த இந்த சமுதாயத்தில் இருந்து மரியாதையை ஏற்றுக்கொண்டால் பித்து பிடித்த மனிதத்தன்மையை மதித்து ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.”
இந்த மனிதன் தெரேசாவாவை விட ஆன்மீகம் மிகுந்தவராகவும் மிகவும் உண்மையானவராகவும் தெரிகிறார்.
இந்த நோபல் பரிசு பணம் Missionaries of Charityக்கு சென்றுள்ளது. இந்த பணம் போரின் வாயிலாக, ரத்தத்தின் வாயிலாக வந்தது; கொலை, மரணம் வாயிலாக வந்த பணம்
அதனால் தான் அன்னை தெரேசாவை போன்றவர்களை “ஏமாற்றுக்காரர்கள்” என்று அழைத்தேன். அவர்கள் தெரிந்தே ஏமாற்றுக்காரர்களாக இருப்பதில்லை, நிச்சயமாக வேண்டுமென்றே இல்லை, அனால் அது ஒரு பொருட்டே இல்லை. அதன் விளைவு, இறுதி முடிவு தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அவர்களது குறிக்கோள் இந்த சமூகத்தில் ஒரு மசகு எண்ணெய் (lubricant) போல செயல்படுவதே ஏனெனில் இந்த சமுதாய சக்கரம், மற்றவர்களை பயன்படுத்தி சுரண்டுவதற்கு எதுவாக இருக்கும் சக்கரங்கள் மற்றும் அடக்குமுறை சக்கரங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் சீராக சுழலலாம். தெரேசா போன்ற மக்கள் லூப்ரிகண்டுகள்! அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதோடு தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
தெரேசாவின் பித்தலாட்டத்தனம் பற்றி
அன்னை தெரேசாவை போன்றவர்களை “பித்தலாட்டக்காரர்கள்” என்றழைத்தேன். ஏனெனில் ஒரு உண்மையான ஆன்மீகவாதி, இயேசுவை போன்ற ஒரு மனிதர் – இயேசுவிற்கு நோபல் பரிசு அளிப்பதை பற்றி உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? சாத்தியமேயில்லை! சாக்ரடீஸிற்கு நோபல் தருவது பற்றி உங்களால் எண்ணிப்பார்க்க இயலுமா? அல்லது மன்சூர்-அல் ஹல்லேஜிற்கு நோபல் பரிசு? இயேசு நோபல் பரிசு வாங்க இயலாதபோது, சாக்ரடீஸ் பெற இயலாதபோது – இவர்கள் உண்மையிலேயே சிறந்த ஆன்மீகவாதிகள், யார் இந்த அன்னை தெரேசா?
உண்மையான ஆன்மீகவாதி ஒரு கிளர்ச்சியாளன், சமூகம் அவனை கண்டிக்கும். இயேசு ஒரு குற்றவாளியை போல கண்டிக்கப்பட்டார், அன்னை தெரேசா துறவியை போல மதிக்கப்படுகிறார். இது சிந்திக்க வேண்டிய விஷயம்: அன்னை தெரேசா சரி என்றால், இயேசு ஒரு குற்றவாளி, ஒருவேளை இயேசு சரி என்றால் அன்னை தெரேசா ஒரு பித்தலாட்டக்காரரே தவிற வேறு ஒன்றும் இல்லை. பித்தலாட்டக்காரர்கள் எப்பொழுதும் இந்த சமூகத்தால் புகழப்படுவர் ஏனெனில் அவர்கள் உதவியாக இருப்பர் – இந்த சமூகத்திற்கு உதவியாக, சமூகத்தில் நிலைமை மாறாமல் இருக்க உதவியாக இருப்பர்.
தெரேசாவின் கபட நாடகம்
நான் பயன்படுத்திய உரிச்சொற்கள் அனைத்தையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளேன். நான் எந்த சொல்லையும் எப்போதும் கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்துவதே இல்லை. அன்னை தெரேசாவை போன்றோருக்கு “கபட வேடதாரி” என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். அவர்களை அவ்வாறு ஏன் அழைத்தேன் என்றால் அடிப்படையில் இவர்கள் இரண்டு வழக்கை வாழ்கின்றனர் – வெளியே ஒரு வாழ்க்கையும், உள்ளே வேறு ஒரு வாழ்க்கையையும் வாழ்கின்றனர்.
தெரேசா எழுதுகிறார்:
ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்த ஒரு கிருத்துவ குடும்பம் குழந்தை தத்துக்கொடுக்க மறுக்கப்பட்டது, அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அல்ல அந்த சமயத்தில் எங்கள் இடத்தில் தத்துக்கொடுக்க குழந்தைகள் இல்லை
ஆக, ஆயிரக்கணக்கான அனாதை குழந்தைகளுக்கு உதவுதல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது, அவர் நடத்திவரும் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் அனாதை குழந்தைகள் உள்ளனர். திடீரென அவர் இல்லத்தில் அனாதை குழந்தைகள் இல்லாமல் போய்விட்டனரா? இந்தியாவில் அனாதை குழந்தைகளுக்கா பஞ்சம்? இந்தியர்கள் அனாதைகளை உருவாக்கி கொண்டே போகலாம், இன்னும் சொல்லப்போனால் உங்கள் தேவைக்கு மீறி!
அவர் நடத்திவரும் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் அனாதை குழந்தைகள் உள்ளனர். திடீரென அவர் இல்லத்தில் அனாதை குழந்தைகே இல்லாமல் போய்விட்டனரா? [ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்த கிருத்துவ குடும்பத்திற்கு]
அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்திற்கு உடனடியாக தத்தெடுக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் இல்லத்தில் அனாதைகளே இல்லையென்றால், அனைத்து அனாதை குழந்தைகளையும் தத்து கொடுத்துவிட்டனர் என்றால், பிறகு எழுநூறு கன்யாஸ்த்ரீகளை வைத்துக்கொண்டு அன்னை தெரேசா என்ன செய்கிறார்? அவர்களின் பணி தான் என்ன? எழுநூறு கன்யாஸ்த்ரீகள்! யாருக்காக பணிவிடை செய்கிறார்கள்? ஒரு அனாதை குழந்தை கூட இல்லை – ஆச்சர்யமாக உள்ளது, அதுவும் கல்கத்தாவில்! சாலைகளில் எங்குவேண்டுமளம் அனாதைகளை காணலாம். குப்பை தொட்டியில் குழந்தைகளை கண்டெடுக்கலாம்; அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்று வெளியே பார்த்திருக்கலாம், எண்ணற்ற அனாதை குழந்தைகளை கண்டெடுத்திருக்கலாம். அவர்களே தாமாக வருவார், நீங்கள் போய் அழைத்துவர தேவையில்லை.
திடீரென்று அவரில்லத்தில் அனாதைகள் இல்லாமல் போய்விட்டனர்! ஒருவேளை அந்த குடும்பம் தத்தெடுக்க உடனடியாக மறுக்கப்பட்டிருந்தால் அது வேறு விஷயம், ஆனால் அந்த குடும்பத்திற்கு மறுப்பு உடனே தெரிவிக்கப்படவில்லை. அவர்களிடத்தில், “நீங்கள் குழந்தையை தத்தெடுக்கலாம், இந்த படிவத்தை நிரப்புங்கள்” என்று கூறியுள்ளனர். அவர்களும் அதை நிரப்பினர். அவர்கள் தங்களது மதத்தை குறிப்பிடும் வரை, அந்த நொடி வரை, அனாதைகள் இருந்தனர், அவர்கள் அந்த படிவத்தை நிரப்பி, “நாங்கள் ப்ராட்டஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள்” என்று குறிப்பட்டதும் உடனடியாக அன்னை தெரேசாவிடம் தத்துக்கொடுக்க அநாதை குழந்தைகள் இல்லை.
இந்த காரணத்தை அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்திடம் கூறவில்லை. இது கபடத்தனம், மோசடித்தனம், கொச்சைத்தனமாது. அங்கு குழந்தைகள் இருந்தனர், பிறகு அவர்களிடத்தில் “எங்களிடம் அனாதை குழந்தைகள் இல்லை” என்று எப்படி கூறுவார்? அக்குழந்தைகள் எந்நேரமும் காட்சிப்பொருள்களாகவே இருக்கின்றனர்.
தெரேசா எனக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்:
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், எங்கள் இல்லத்திற்கு வந்து எங்கள் அநாதை குழந்தைகளையும் எங்கள் பணியையும் பார்வையிட வரவேற்கிறேன்
அவர்கள் தொடர்ந்து கண்காட்சியில் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அந்த ப்ராட்டஸ்டண்ட் குடும்பத்தினர் தத்தெடுக்க ஏற்கனவே ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்துவிட்டனர், அதனால் தெரேசாவால் அவர்களிடத்தில் “மன்னிக்கவும் எங்களில்லத்தில் அனாதை குழந்தைகள் இல்லை” என்ற கூற முடியவில்லை.
தெரேசா அவர்களிடத்தில் கூறியதாவது: “இந்த அனாதைக்குழந்தைகள் ரோமன் கத்தோலிக்க வழியில் வளர்க்கப்பட்டுள்ளனர் அதனால் அவரகளது உளவியல் வளர்ச்சிக்கு பாதிப்பக இருக்கும், ஏனெனில் அது அவரகள் வாழ்க்கையில் இடையூறாக இருக்கும். இப்போது அவர்களை உங்களிடத்தில் அனுப்பிவைத்தான் அவர்களது அமைதி குலைத்துவிடும் அது அவர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. அதனால் தான் குழந்தையை உங்களுக்கு தத்து கொடுக்க இயலாது, நீங்கள் ப்ராட்டஸ்டண்ட் என்பதால் அல்ல.”
“ஒருவேளை அவர்கள் படிவத்தில் “கத்தோலிக்” என்று நிரப்பியிருந்தால் உடனடியாக குழந்தையை தத்தெடுக்க முடிந்திருக்கும்.”
அது தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம். அந்த குடும்பத்தினர் முட்டாள்கள் இல்லை; கணவர் ஐரோப்பா பலக்லைக்கழம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார் – அவர் காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார், மனைவியும் அதிர்ச்சியடைந்தார். ஒரு குழந்தையை தத்தெடுக்க அவர்கள் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளனர், அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் என்பதால் தத்தெடுக்க மறுக்கப்பட்டுவிட்டனர். ஒருவேளை அவர்கள் படிவத்தில் “கத்தோலிக்” என்று நிரப்பியிருந்தால் உடனடியாக குழந்தையை தத்தெடுக்க முடிந்திருக்கும்.
தெரேசாவின் மதம் மாற்றுதல் பற்றி
ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் – இந்த குழந்தைகள் அடிப்படையில் இந்து தர்மத்தை சேர்ந்தவர்கள். அன்னை தெரேசா அக்குழந்தைகளின் உளவியல் நலனில் அவ்வளவு அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் அவர்களை இந்து தர்மத்தின் அடிப்படையில் வளர்ந்திருக்க வேண்டும். அனால் அக்குழந்தைகள் கத்தோலிக்க முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்து தர்மத்தை சார்ந்த குழந்தைகள் கத்தோலிக்க முறைப்படி வளர்க்கப்படுகின்றன, அது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்காதா? இப்போது அவர்களது உளவியல் நலன் பாதிக்கப்படுகிறதே? இது உண்மையானால், அன்னை தெரேசா எந்த நபரையும் கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற முயலக்கூடாது.
அது தான் அவர்களது முழுநேர வேலை: மதம் மாற்றுதல். சற்று தினங்களுக்கு முன் இந்திய நாடாளுமன்றத்தில் “மத சுதந்திரம்”(Freedom of Religion) என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவின் நோக்கம், எவரையும் மற்றவர்களை மத மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது. ஒருவர் தானாகவே முன்வந்து அவர் விருப்பத்தினால் மதம் மாறலாமே தவிர யாரும் யாரையும் மதம் மாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது. அன்னை தெரேசா தான் இதை எதிர்த்த முதல் நபர். அவர் தனது வாழக்கையில் எதையுமே எதிர்த்ததில்லை, இது தான் முதல் முறை, கடைசியாக கூட இருக்கலாம். அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினர், இருவருக்கும் இடையே சூடான சர்ச்சை வெடித்தது. தெரேசாவும் அவரை சார்ந்தவர்களும் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் (அரசியல்வாதிகள் எந்நேரமும் வாக்குகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பர், கிருத்துவ சமுதாய மக்களின் வாக்குகளை இழக்க முடியாது) எனவே அந்த மசோதா கைவிடப்பட்டது, எந்த விவாதமும் இல்லாமல் அப்படியே சத்தமின்றி கைவிடப்பட்டது.
மக்களை மதம் மாற்றுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளார் தெரேசா. மக்களை மதம் மாற்றப்படாவிட்டால், உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் யாராக/என்னவாக இருந்திருப்பார்கள்? கிருத்துவ மதம் இரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் இருக்கிறது, ஆனால் உலகத்தில் அதிக மக்கள் எண்ணிக்கையை கொண்ட மதமாக இருக்கிறது. எங்கிருந்து இந்த மக்கள் வந்தனர்? எல்லோரும் மதம் மாற்றப்பட்டதால் வந்தவர்கள். ஆனால் அவர்களது மதம் மாற்றும் முறைகள் வேறுபட்டதாக இருக்கும்.
முற்காலங்களில் கிருத்துவர்களும் முஹமதியர்களும் போர்தொடுத்து மக்களை வாள்முனையில் தங்கள் மதத்திற்கு மாற்றினார்.
முஹம்மதியர்கள் இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளனர், ஏனெனில் அவர்கள் இன்னும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நவீன காலங்களுக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள், அது எல்லாவற்றிலும் மற்றவர்களை விட தன்னை நவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது. வாள்முனையில் உங்களை வற்புறுத்தி மதம் மற்றும் பழைய யுக்தியை கைவிட்டுவிட்டனர், அது வழக்கொழிந்து விட்டது. இப்போது அவர்கள் உங்களுக்கு சேவையாற்றுகின்றனர் – உங்களுக்கு உணவு, சேவை, கல்வி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களை கொடுக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். ராணுவ சக்தியாக இருப்பதிலிருந்து தற்போது பொருளாதார சக்தியாக மாறிவிட்டனர், ஆனால் மதமாற்றம் தொடர்கிறது.
நிறைய ஆதாரங்கள் உள்ளன, கிருத்துவர்கள் இதுவரை ஒரு பணக்கார இந்துவை கூட மதம் மாற்ற முடியவில்லை. ஒரு பணக்கார இந்துவை எப்படி மதமாற்றுவது? அவனுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. உங்களால் ஏழைகளையும், யாசிப்பவர்களையும் தான் மாற்றமுடியும் ஏனென்றால் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பது எளிது, எளிதாக அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம்.
அன்னை தெரேசா உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், ஒரு நபரை மதம் மாற்றினால் அவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான் என்று நம்பினால், தெரேசா மதம் மாற்றுதலுக்கு எதிராக இருக்கவேண்டும், ஒருவேளை அந்த நபர் தானாக முன்வந்து தனது மாற்றிக்கொண்டாலே தவிற.
என்னைப்பொறுத்தவரை, அன்னை தெரசாவுக்கு அவரை போன்றோரும் கபட வேடதாரிகள்: சொல்வது ஒன்று, அழகிய முகப்புக்கு பின்னால் செய்வது முற்றிலும் வேறொன்று. இது தான் அரசியலின் மொத்த விளையாடும் – எண்களின் அரசியல்.
2 பேர், தாடி மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
132
22 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி

Friday, January 22, 2021

English words

                                                 English Words

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Condemnation  Kandanam,  

Alleged  Kuttram saddu

 termed. sollappadukiRathu

 utmost efforts.  miguntha muyaRssikaL

ensure . Uruthisey

recurrence Meendum nikalamal


Tuesday, October 13, 2020

யார் இந்த யாழ்ப்பாணத்தான்? பேசாலைதாஸ்

 யார் இந்த யாழ்ப்பாணத்தான்? பேசாலைதாஸ்


தந்தை செல்வா மறைவுக்குப்பின்னர், தமிழர் விடுதலை கூட்டணியில், தலைவர் பிரச்சனை எழுந்தது, அந்த காலகட்டத்தில் வயதில் மூத்தவரும், சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இராசரத்தினதுரை உண்மையில் தலைவராக இருந்திருக்கவேண்டியவர். அவர் மட்டக்களப்பு என்றதினால், பிராந்திய செல்வாக்கு இங்கே ஆதிக்கம் பெற்றது, யாழ்ப்பாணத்தை பிற்புல மாக கொண்ட, வயதில் இளமையான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைவ ராக்கப்பட்டார்.  தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை களைக்க, அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயர்கரசி மேடைப்பேச்சாளராக களமி றக்கப்பட்டார். அவர் மேடைதோறும், அத்தான் என்னத்தான்? அவர் யாழ்ப்பா னத்தான் என்று பாடி, யாழ் மக்களை தமிழருக்கு அத்தானாக்கினார்! அது வரலாறு அல்ல,

                                                            யாழ்ப்பாணத்தார், நாகதீபம் என்று அழைப்பட்ட, தற்போதைய யாழ் குடா நாட்டில் வழ்ந்தவர்கள் இல்லை. பாணர்கள் தமிழக த்தில் இருந்து வந்தவர்கள். அந்த பாணர் எனும் குடியினர் தமிழகத்தில் இரு ந்து எப்படி காணாமல் போனார்கள்? சரித்திர புகழ் பெற்ற நீலகண்ட யாழ்பா ணர் சந்ததியினர் கதி என்ன? இது பற்றி என் சிற்றறிவுக்கு எட்டக்கூடியவகை யில் சில தேடல்களை மேற்கொண்டேன் அதன் விளைவு, இந்த கட்டுரை.

                               


 பண் அமைத்து பாடுவோர் என்பதனால் இவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இந்த பாணர்களே தமிழ் இசையின் ஆதி மூர்த்திகள். பாணர்கள் சாதியத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல, உண்மையில் ஆதி தமிழ் குடியில் சாதி இல்லை. வடக்கில் இருந்து வந்த வடக்கத்தியான் இந்த ஜாதியை கொண்டுவந்தான். அவனை செருப்பாலே அடிக்கவேண்டும். தமிழுக்கு ஜா என்ற எழுத்து கிடையாது. எனவே தமிழருக்குள் ஜாதி என்பது இருக்க நியாயமில்லை, ஆனால் குடிகள் இருந்தனர். வடக்கத்தியானுக்குத்தான் ஜாதி உண்டு, அவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜா என்ற எழுத்தை இணைப்பா ர்கள், வனஜா, கிருஜா, பத்மஜா,பங்கஜா இப்படி பெயர் கொண்டவர்கள், மைதிலி வேதப்பிராமணர்கள் ஆகும், அதை ரெம்ப பெருமையாக பேசுவார் கள் இந்த சாதி திமிர்கொண்ட நக்கிகள்! எனவே பாணர்கள் சாதி அல்ல, அவர்கள் பழந்தமிழ் குடிகள்.  தமிழர்கள் குடிகளினால் ஆனவர்கள் அதுவும் சிவனின் குடிகள், நாமார்க்கும்குடிகள் அல்லோம்,,,,

                                                                     "பாணான் கழுதை பரதேசம் போனான்" என்று சொல்வார்கள். பாணனுக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? இருக்கவே, இரு க்கு, பாணர்கள்,  ஊர் ஊராப் பாடிப் பொழைக்கப் போவார்கள், அப்படி போனால், 6 மாசம் கழிஞ்சுதான் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய தட்டு,முட்டு, பாய், படுக்கை எல்லாம் சொமந்துக்கிட்டுக் கூடப்போற கழுதைக்கு எப்போ ஊரு க்கு வரப்போறோம்னு தெரியாது? பாணன் எப்ப வரு வானோ, அப்பத்தான் அவன் கூடப்போன கழுதையும் ஊருக்குத் திரும்பும்.  கழுதை என்றவுடன் என் ஊர்க் கழுதைகள் சத்தம் கேட்கின்றது! கூடவே ஒரு என் பள்ளிக்கூட நினைவுகளும் தொற்றிக்கொள்கின்றது.

                                                           


                                      அந்தக்காலத்திலே பாடசாலைக்கிடையில் தமிழ் தினப் போட்டி நடக்கும், அது இலங்கை பூராக வும்  மாவட்டம், மாகாண அளவில் நடக் கும்,  சில பாடல்கள் கல்வி திணைக் கள த்தால் வெளியிடுவார்கள், அப்பாட லுக்கு இனிமையான இசை அமைத்து, பாடிக்காட்ட வேண்டும், அவ்வாறு பாணன் பாணிக்கு பாடிய பாடலை கல்வி திணைக்களம் போட்டிக்கு வெளியிட்டது, அப்பொ
ழுது பாடசாலை தலைமை வாத்தியார் துரம் மாஸ்டர் அவர்கள், பாணன் பாடலுக்கு அழகாக இசைய மைத்து எங்களை பாடச்சொன்னார், மாவட்ட அளவில் அது முதல் பரிசை ப்பெற்றது பாடல் இதோ!

இம்பர்வான்   எல்லை   இராமனையே   பாடி
என்கொணர்ந்தாய்   பாணாநீ   என்றாள்  பாணி
வம்பதாம்   களப   மென்றேன்,  பூசுமென்றாள்,
மாதங்க    மென்றேன்,   யாம்வாழ்ந்தே   மென்றாள்,
பம்புசீர்   வேழமென்   றேன்தின்னு    மென்றாள்,
 பகடென்றேன்   உழுமென்றாள்   பழனந்   தன்னை
கம்பமா  என்றேன்    நற்களியா    மென்றாள்,

கைம்மா  என்றேன்    சும்மா    கலங்கினாளே !         

                                                                                         இந்த பாடலுக்குறிய விளக்கம் தெரிந்ததா?  அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற் று வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள் ! புலவர் 'களபம்கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் !   ( களபம் என்றால் யாணை அல்லது சந்த னம், அது கேட்ட அவர் மனைவி, ’சந்தனம் என புரி ந்துசாப்பாட்டு க்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவ ளாகசரி பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள் !


                         புலவரோஎன்ன இவள்தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்! மாதங்கம் என்றால் யாணை !(மாதங்கம் யானைநிரம்ப தங்கம்)அவர் மனைவியோ, 'மா தங்கம்அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டுஅதைக் கொண்டு நாம் நலவாழ்வு வாழலாம் என்கிறார் !இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம் ! (வேழம் யானைகரும்பு)

அவர் மனைவியோகரும்பு என புரிந்து கொண்டுசரி சாப்பிடுங்கள் என்கிறார்!பாணினி இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறள் என்பதை உணர்ந்த பாணன், ’பகடு’ கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார்!(பகடு = யானை, உழவுமாடு)பகடு கொண்டு வந்திருக்கிறீர்களா, நல்லதாய்ப் போயிற்று, அதை ஏரில் பூட்டி வயலை உழும் என்று சொன்னாள் !
புலவர்இப்போதும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா'கொண்டுவந்திருக்கிறேன்என்கிறார் ! (கம்பமா யானைகம்புமாவு)

மனைவி 'கம்பமாஎன்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டுநல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள் !இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைம்மாகொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! (கைம்மா யானை)
அப்போதுதான்நீண்டதும்பிக்கையைஉடையயானை (கை மா கைம்மாஎன அறிந்த அவர் மனைவிநம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில்உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம் !    ஆக மொத்தத்தில் பாணர்கள் இசையமைத்து பாடித்திரி ந்த பறவைகள்!
                                 இந்த பாணர் குடிகளைபற்றி  புறநானூற்று புலவர் மாங்குடி கிழார் இப்படி பாடுகின்றார்.துடியன் பாணன் பறையன் கடம்பனென்று, இந்நான் கல்லது குடியும் இல்லை. - புறம்:335 மாங்குடி கிழார்.மூத்த முல்லைக் குடிகளுள் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கே சிறந்த குடிகள் என்பது இப்பாட்டின் பொருள். நாகரீகத்தினுச்சியில், அதாவது சங்கால தமிழர்களிடையே கவியோடு இசைபாடித்திரிந்தவர்கள் இவர்கள். தேவைக்கும் கூடுதலான உபரி உற்பத்தியும், ஓய்வும் கிடைக்கும் நாகரிகச் சமூகத்தில் மட்டுமே கவிதை, இசை, பாடல், நாடகம் ஆகியன சாத்தியம். 'துடி' என்னும் இசைக்கருவியில் தேர்ச்சிபெற்று, அதை வாசிப்பதையே தங்கள் முழுநேர வாழ்வாகக் கொண்டவர்கள் 'துடியர்கள்; 'யாழ்' என்ற இசைக்கருவியில் பண்ணோடு பாடல் பாடி மகிழ்விப்போர் பாணர்கள்; இதைப் போன்றே, பறையர், கடம்பர் ஆகிய இசைவாணர்கள் உருவானார்கள்.
இவ்வாறு உயர் இசை பாரம்பரியத்தைல் பிறந்தவர்களே ஈழத்தமிழன். அதை னாம் உணராமல், இன்று நாம் கர்நாடக சங்கீதம்(சங்கீத சபாக்கள்), மேற்கத்திய இசை(ஆர்க்கெஸ்ட்ரா), சினிமா ஆகியன கேளிக்கைத் தொழிற்சாலை 'Entertainment Industry' என்றும், அவற்றைத் தருபவர்களை 'கலைஞர்கள்' என்றும் சொல்கிறோம். இன்றைய நாகரிகக் காலத்தில் இவற்றில் ஈடுபடும் தமிழர்கள் இருபதிலிருந்து முப்பது விழுக்காடு இருக்கலாம்.


                            சங்ககாலத்தின் கேளிக்கைத் தொழிற்சாலை - 'Entertainment Industry' -யாக விளங்கியவர்கள் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கு குடி இசைவாணர்கள் ஆவர். வேளாண்குடி உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தொழிற் குடிகளும் இசைவாணர்களை எத்துணை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றின என்பதன் சாட்சியே மாங்குடிக் கிழாரின் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது (எக்)குடியும் இல்லை.' என்னும் புறம்:335 பாடல் சொல்லும் சாட்சி. ஏதோ பிராமணர்கள்தாம் இசையையே கண்டுபிடித்தவர்கள் போல, 'சங்கீத மும்மூர்த்திகள்' என்றும், 'தியாகப் பிரும்மம்' என்றும் அளவுக்க திகமாக ஆட்டம் போடுகிறனர். இசையின் கொச்சை வடிவத்தை மட்டுமே கொண்டிருந்த சாம வேதத்திலிருந்துதான் கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட உலகின் அனைத்து இசைகளும் பிறந்ததாக அவிழ்த்து விடுகிறார்கள். பண்ணோடு பாடல் பாடுவது, இசையோடு நடனம் ஆடுவது போன்றவற்றில் தேர்ந்த பாணர்களை, மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் ஆகியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள். பாணர்களின் முக்கிய இசைக்கருவியான யாழில், சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவையும், ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கின்றன.

                                                              இவ்வாறு யாழ் இசையில் சிறந்து விளங்கிய ஒரு பாணன் இலங்கையில் உள்ள மன்னன், ஒருவேளை அது இராவணானாக இருக்கலாம், இராவாணனும் வீணை வாசிப்பதில் மிகதேர்ச்சி பெற்றவன் என்பதும், சிவபக்தன் என்பதும் வெளிப்படை, இவ்வாறு இராவணனை தமிழகத்தில் இருந்து வந்த பாணான், அதாவது முன்பு சொன்னது போல, கழுதையோடு வந்த பாணான், இராவாணனை புகழ்ந்து பாடியதால், தமிழகத்தோடு ஒட்டி இருந்த பகுதியை பாணானுக்கு பரிசாக கொடுத்து இர்க்காலாம், பின்வந்த கடற்கோளினால் அந்த பகுதி தமிழகத்தில் இருந்து பிரிந்து ஒரு தீபகற்பமாக மாறி இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

                                                                           எனவே இந்த தீபகற்பத்தில் வாழ்ந்த ஆதி தமிழர்களிடத்தில் சாதி இருந்ததில்லை, அப்படியானால் தற்போது யாழ்ப்பாண த்தில் சாதியம் தலைதூக்கி ஆடுவதின் காரனம் என்ன? விடை இது தான்! மாறவர் மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழமன்னன் சூடிய பொன்-மகுடம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைப் பாணர்களுக்குப் பரிசி லாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது. துருக்கர் படையெடுப்புக் குப் பின்னர் இக்குடியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அதுமட்டு மல்ல, குப்தர்கள், மொகலாலயர்கள், களப்பிரர்கள் வருகையின் பின், ஆதி தமிழர் கள் ஓரங்கட்டப்பட்டு, அழிக்கப்பட்டனர் என்பதே உண்மை, எனவெ தற்போது சாதியம் பேசுபவர்களும், சாதிய பெருமை கூறும் யாழ்ப்பாணத்தவர்கள், வந்தேறு வடக்கத்தியானக இருக்கவேண்டும், அல்லது அவர்களையும், பார்ப்பணியத்தையும் நக்கிப்பிழைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும், சாதியத்தை ஒழிப்போம், தமிழை வளர்ப்போம்! அன்புடன் பேசாலைதாஸ்