Wednesday, April 26, 2017

மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் இடத்துக்கான தீர்ப்பு யூலை 28

மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் இடத்துக்கான தீர்ப்பு யூலை 28

(பிராந்திய செய்தியாளர்) 25.04.2017
கடந்த 2013ம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர மாந்தைப் பகுதியில் மனித புதை குழியிலிருந்து கண்டுப் பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை இலங்கையிலேயே பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு தரப்பு வாதங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகி வரும் சட்டத்தரனிகளின் வாதங்களுக்கான கட்டளை எதிர்வரும் யூலை மாதம் 28ந் திகதி இடம்பெறும் என மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh இவ்வாறு கட்டளை பிறப்பித்தார்.
கடந்த 23.12.2013 அன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்றவேளையில் மனித எச்சங்கள் கொண்ட புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இவ் புதைகுழியானது அன்று தொடக்கம் 05.03.2014 வரை 33 தடவைகள் அன்றைய மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்ன தலைமையில் அகழ்வு செய்தபோது 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
.மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இவ் மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யும் சம்பந்தமாக மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரனை நேற்று செவ்வாய் கிழமை (25.04.2017) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது
இவ் வழக்கில் அரச சட்டத்தரனியாக சிரேஷ;ட சட்டத்தரனி சமிந்த விக்கிரமரட்ண மற்றும் குற்றத்தடுப்பு விசாரனை பிரிவு அதிகாரியும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த சட்டத்தரனிகள் வீ.எஸ்.நிரஞ்சன், திருமதி மங்கேளஸ்வரி சங்கர், ரனித்தா ஞானராஐh, வீ.புவிதரன் மற்றும் மன்னார் சட்டத்தரனிகள் சிரேஷ;ட சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன், எஸ்.செபநேசன் லோகு, சிராய்வா உட்பட பல சட்டத்தரனிகள் இவ் வழக்கில் ஆஐராகியிருந்தனர்.
அத்துடன் பாதிப்புற்றோர் சார்பாக பலர் மன்றுக்கு வருகை தந்திருந்தபோதும் ஆறு பேர் மற்றில் ஆஐராகி இருந்தனர்.
இவ் வழக்கில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யப்படும் இடம் சம்பந்தமான வாத பிரதிவாதங்களே நடைபெற்றது.
இவ் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் நீதிமன்றில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கையில் இலங்கையில் இதுவரைக்கும் நடைபெற்ற காரணிகளில் நம்பகத் தன்மை இ;லை எனவும் அதாவது மாத்தலை பகுதியில் நடைபெற்ற மனித எச்சப் பரிசோதனையில் நம்பகத்தன்மை ஏற்படவில்லையெனவும், சட்ட வைத்திய நிபுணர் வைத்தியரத்தின ஐனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தமாகவும் இவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரனிகள் ஏற்கனவே இந்த மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு குற்ற விசாரனைப் பிரிவு பொருத்தமான நிறுவனமாக டீநவய யுயெடலவiஉ in குடழசனைய (ருளுயு) , டீநபநiபெ ஊhiயெ, மற்றும் ஆnஐன்டினா நாட்டுக்குரிய நிறுவனம் ஆகியவற்றை தெரிவு செய்து மன்றில் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் அரசு தரப்பு சார்பாக சீ.ஐ.டி யினரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது இவ் எச்சங்களை அமெரிக்காவிலுள்ள ஒரு ஆய்வுகூட நிறுவனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்ய அனுமதி வேண்டியிருந்தபோதும்
அவற்றை பாதிப்புக்குள்ளானவர்கள் சார்பில் ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் ஏற்கனவே அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மாத்தலை புதைக்குழிக்கான ஆய்வு இந்த அமெரிக்காவிலுள்ள ஒரு ஆய்வுகூட நிறுவனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்குள்ள சந்தேகம் என்னவென்றால் இவ் நிறுவனத்துக்கு அனுப்பப்ட்டது சரியான மனித எச்சமா? சரியான மனித எச்சங்கள் அனுப்பப்படுமானால் அது எவ்வாறு பொதி செய்யப்பட வேண்டும் அத்துடன் மனித எச்சங்கள் கட்டுகாப்பு சம்பந்தமான சங்கிலி தொடர் சரியாக அமைய வேண்டிய என பல விடயங்களை மன்றில் காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் இவ் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்
.
இதற்கு அரச தரப்பினர் முன்வைத்தாவது காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு தாங்கள் முழுமையான உத்தரவாதம் தருவதாகவும் இலங்கையின் நிபுணத்துவத்தை பயண்படுத்தி இவ் மனித எச்சங்களை ஆய்வு செய்வது மேல் எனவும் இதில் திருப்தி காணாத பட்சத்தில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடலாம் என இவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் இன்னொரு விடயத்தையும் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அதாவது மன்னார் புதைகுழியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மனித எச்சங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது அங்குள்ள வைத்தியர்கள் இடமாற்றம் பெற்று செல்வதாக அறிகின்றோம். இப்படியான நிலையில் இந்த மனித எச்சங்களின் நிலை என்னவாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் நிலவகின்றது என தெரிவித்தபோது
அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது ஏற்கனவே அனுராதபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையிலேயே அவைகள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்படியாயின் சரியான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முகமாக நீதிபதி மற்றும் பாதிப்புற்றோர் ஊடகங்கள் நீங்கள் குறிப்பிடும் எவர் முன்னிலையிலும் இவ் எச்சங்களை திறந்து பகுப்பாய்வுக்கு அனுப்பலாம் ஆகவே மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை இலங்கையிலேயே மேற்கொள்ள வேண்டும் என தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இவர்களின் இரு தரப்பு வாதங்களுக்கும் செவிமடுத்த நீதிபதி கட்டளைக்காக எதிர்வரும் யூலை 28ந் திகதி இவ் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)

Tuesday, April 25, 2017

மன்னாரில் எரிபொருள் இன்மையால் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் ஒரு நிலையத்தில் மட்டும் விநியோகம் இடம்பெறுகின்றது.

மன்னாரில் எரிபொருள் இன்மையால் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் ஒரு நிலையத்தில் மட்டும் விநியோகம் இடம்பெறுகின்றது.
(பிராந்திய செய்தியாளர்) 25.04.2017
நேற்று முன்தினம் திங்கள் கிழமை (24.04.2017) முதல் நாடு பூராகவும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரில் திங்கள் கிழமை காலை முதல் மன்னார் நகரில் பெற்றோல் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.
அதேநேரத்தில் நகரத்துக்கு அப்பாலுள்ள எரிபொருள் நிலையங்களில் பிற்பகல் வரையுடன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டபோதும் எரிபொருள் தீர்ந்த நிலையில் தற்பொழுது எரிபொருள் நிலையம் வெரிச்சோடிக் காணப்படுகின்றன
.
மன்னார் நகரில் மன்னார் மாந்தை மேற்கு எரிபொருள் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கள் கிழமை காலையுடன் எரிபொருள் விநியோகத்தை இடைறிறுத்தி வைத்திருந்தபோதும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாந்தை மேற்கு எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய சேவை தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த எரிபொருள் நேற்று செவ்வாய் கிழமை (25) காலை முதல் விநயோகத்தை மீண்டும் ஆரம்பித்தபோது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நெரிசல் பட்டுக்கொண்டிருப்பதையும், எரிபொருள் இன்மையால் எரிபொருள் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.
(வாஸ் கூஞ்ஞ)

Wednesday, April 5, 2017

மன்னாரில் தமிழ் முஸ்லீம் மக்களின் நிலவிடுவிப்பு போராட்டத்தின்போது சர்வதேச மன்னிப்பு சபை குழுவினர்

மன்னாரில் தமிழ் முஸ்லீம் மக்களின் நிலவிடுவிப்பு போராட்டத்தின்போது சர்வதேச மன்னிப்பு சபை குழுவினர்
(பிராந்திய செய்தியாளர்) 03.04.2017
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச பகுதியிலுள்ள முள்ளிக்குளம் மக்களும் முஸ்லீம் மக்களும் தங்கள் பூர்வீக காணியை விடுவிக்கக்கோரி அப்பகுதியில் இரு வௌ;வேறு இடங்களில் கடற்படை முகாமுக்கு முன்பாகவும் பள்ளிவாசல் முன்றலிலும் தங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை அறிந்து சர்வதேச மன்னிப்புச் சபை பொது செயலாளர் சாளில் சிற்றி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் லண்டனிலிருந்து இவ்விடங்களுக்கு திங்கள் கிழமை (03.04.2017) வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்களை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படங்கள்.
இவ் சந்திப்பின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வன்னி எம்.பி.எஸ்.வினோதராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.சிவாஐpலிங்கம், ஐp.குணசீலன் உட்பட அருட்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
( வாஸ் கூஞ்ஞ )

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மரிச்சிக்கட்டி கிராமத்திற்கான 13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான தார் பாதைகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீடு
//////////////////////////////////////////////////////////////////////////////
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மரிச்சிக்கட்டி கிராமத்திற்கான 13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான தார் பாதைகள் இன்று அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் மரிச்சிக்கட்டி கிராமத்திற்கு பொறுப்பான இணைப்பாளர் இமாம் இம்தியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்

புலிகளுக்கு பணம் திரட்டிய ஐவருக்கு 20 வருட சிறை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு, நோர்வேயிலும் விசாரணைகள் தொடர இருக்கின்றது.

புலிகளுக்கு பணம் திரட்டிய ஐவருக்கு 20 வருட சிறை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு, நோர்வேயிலும் விசாரணைகள் தொடர இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரின் மேன்முறையீட்டு மனுவினை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன், மேன்முறையீடு செய்த நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நெதர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் நிதி சேகரித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சட்டவிரோதமாக அதிஷ்ட இலாபச் சீட்டுக்களை விநியோகித்தமை, பலருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, விடுதலைப் புலிகளுக்காக சேகரித்த நிதியினை இலங்கைக்கு அனுப்பியதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவர்கள் இழைத்ததாக கூறப்பட்ட குற்றத்திற்காக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தேகநபர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த ஐந்து பேரில் நால்வர் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை நேற்றைய தினம் தள்ளுபடி செய்த நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பையொட்டி நோர்வேயில் புலிகளுக்காக பணம் சேகரித்து தமது சொந்த பைகளை நிரப்பிய பல நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர பலர்  செயல்படுவதாக வதந்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

Sunday, April 2, 2017

மக்களின் உண்மையான போராட்டத்தை சீர் குலைக்க பலர் துணை போகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மக்களின் உண்மையான போராட்டத்தை சீர் குலைக்க பலர் துணை போகின்றார்கள்

வன்னி மக்களின் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்த உங்களை இறைவனின் உதவியால் ஒரு போதும் கைவிடமாட்டேன்.
பதவி, பட்டம், சொகுசு எல்லாமே உங்களுக்குப் பிறகுதான். இந்தப் போராட்டத்தில் நானும் ஒரு பங்காளியே.
முசலிப் பிரதேச மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த அநியாயங்களுக்காக நான் குரல் கொடுத்து, துணிந்து போராடியதனாலேயே பேரினவாதிகள் என்னை ஓர் இனவாதியாக சிங்கள மக்கள் மத்தியிலே சித்தரித்துக் காட்டினர்.
இனவாத நச்சு ஊடகங்களும் இனவாத சூழலியலாளர்களும் என்னை தாறுமாறாக விமர்சித்தனர், விமர்சித்தும் வருகின்றனர்.
நமது சமூகத்தில் உள்ள நயவஞ்சகக் கூட்டம் ஒன்று, நான் அரசியலுக்காக, இருப்புக்காக, வில்பத்து விவகாரத்தை நானே பூதாகரப்படுத்துவதாகத் தெரிவித்து அவமானப்படுத்தினர்.
பெளத்த இனவாதிகளிடம் தவறான தகவல்களை வழங்கி அவமானப்படுத்தினர்.
கடந்த 2012ஆம் ஆண்டு இந்த பிரதேச மக்களின் எண்ணங்களோ, விருப்பங்களோ பெறாமல் உங்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன.
அதனை விடுவிப்பதற்காக நான் இற்றைவரைப் போராடிக் கொண்டு இருக்கிறேன். அதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து கையெழுத்து இடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலால் இந்த பிரதேசத்துக்கு இன்னுமொரு பேரிடி விழுந்துள்ளது.
இந்த போராட்டம் மக்கள் போராட்டம். தலைவர்கள் வழி நடத்தி நீங்கள் வீதிக்கு வரவில்லை. உங்கள் பிரதிநிதியான நானும் உங்களை விட்டு ஓட மாட்டேன்.
tஇந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்வதற்கு எனது அதி உச்ச அதிகாரத்தை பயன்படுத்துவேன்.
இறைவனும் இதற்கு துணை புரிவான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மிகவும் காட்டமான தொனியில் நமக்கு நடந்த அநியாயங்களை எடுத்துரைத்து வர்த்தமானியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன்.
அரசியல் தலைமைகள் மைத்திரியை ஆதரிக்க முன்னர் முஸ்லிம் மக்கள் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தார்கள் என்ற உண்மையை நாட்டு தலைமைகளிடம் மீண்டும் உணர்த்தியுள்ளோம்.
நமது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும் என்ற எமது நியாமான கோரிக்கைக்கு ஜம் இய்யத்துல் உலமா, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், அரசியல் தலைவர்களான அமைச்சர் பெளசி, முஜிபுர் ரஹ்மான் எம்.பி, சகோதரர் அசாத் சாலி போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
எனினும் எமது சமூகத்தின் நயவஞ்சக அரசியல் வாதிகள் இன்னும் என்னைத்தான் தூற்றுவதிலேயே காலம் கடத்துகின்றனர்.
கூட்டங்கள் போட்டு என்னை திட்டுவதிலேயே இவர்கள் திருப்தி காண்பது ஏனோ எனக்குப் புரியவில்லை.
முசலி பிரதேசத்தில் வன இலாக்காவுக்கு தற்போது சொந்தமாக்கப்பட்டுள்ள நமது மக்களின் பூர்வீக காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கையளிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை பிரதமரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
அதே போன்று தற்போது நடந்துள்ள இந்த பாதகமான விடயத்திலும் எந்த விட்டுகொடுப்பும் எம்மிடம் இல்லை. சிங்கள அரசியல் வாதிகள் சிலர் யதார்த்தம் புரியாமல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க கூடாது.
ஜனாதிபதி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உயிரையும் துச்சமென மதித்து கடந்த அரசில் இருந்து வெளியேறி, தேர்தலில் வெல்லுவோமா அல்லது தோற்று விடுவோமா என்று நிலை குலைந்திருந்த ஜனாதிபதிக்கு உரமூட்டியவர்கள் நாங்களே.
வெறுமனே ஒப்பந்தங்கள் இல்லாமல் நாங்கள் இணையவில்லை. உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின்னரே நாங்கள் ஆதரித்தோம், அவர்களதுவெற்றிக்கு உழைத்தோம்.
எனவே முஸ்லிம் மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்த இடமளிக்க மாட்டோம். எமது சமூகம் போராட்டத்துக்கு பழக்கப்பட்டது அல்ல. நாட்டை துண்டாடுவதற்கோ பயங்கரவாத்திற்கு துணை போவதற்கோ நாங்கள் எந்த காலத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள் அல்லர்.
எனினும் எங்களை வீதிக்கு இறங்கி போராடுமளவுக்கு இந்த நல்லாட்சி கொண்டு வந்திருப்பதுதான் வேதனையானது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.