Sunday, May 21, 2017

எம்மிடையே பிளவுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும் போதுதான் தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்கும் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.



எம்மிடையே பிளவுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும் போதுதான் தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்கும் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
(பிராந்திய செய்தியாளர்) 19.05.2017
ஆயுதக் குழுக்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடியது பிரதேச வாதப் பார்வையில் நடந்து கொண்டது போன்ற செயல்பாட்டினால் பல பின்னடைவை சந்தித்தனர். இன்று நாம் எல்லா இடங்களிலும் ஏட்டிக்குப் போட்டியாக சிலை சுரூபங்கள் வைத்து ஒரு கிராமத்தை இரு கிராமமாக பிரித்து சண்டையிடுவோமாகில் எமது எதிர்கால சந்ததினர் எம்மைவிட பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள். ஆகவே பெரியோர்கள் நல்வழி காட்ட வேண்டும் என வடக்க மாகாண அமைச்சர் சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
வியாழக்கிழமை (18.05.2017) மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் இங்கு முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
எம் மக்கள் குறிப்பாக பாதிப்பு அடைந்த மக்கள் இந்த நினைவிலிருந்து விலகி நிற்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இந்த எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த வேண்டும் என்று ஒரு சில தினங்களுக்கு முன் நாம் தீர்மானித்திருந்தோம். நாம் ஒரு இடத்தை ஏற்பாடு செய்யப்பட்டபோது பல பிரச்சனைகள் எமக்குத் தோன்றினும் இந்த இடத்தை நேற்றைய தினம் தெரிவு செய்து இதில் இவ் நிகழ்வை இன்று நடாத்தகின்றோம்.
இந்த இடத்தை தெரிவு செய்தனின் நோக்கம் இந்த பகுதி மக்கள் நேரடியாக பாதிப்பு அடைந்தவர்கள் என்பதாலேயே. எமது முன்னைய தளபதிமார் யுத்தம் புரிந்து மாண்ட இடம் இந்த இடம். ஆயிரக்கணக்கான மக்கள் வராவிடினும் சிலராவது உணர்வு பூர்வமாக இங்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுகின்றீர்கள். அதற்கு நன்றியும் நவிழ்ந்து நிற்கின்றோம்.
இங்கு வந்திருக்கும் நீங்கள் குறிப்பாக பெரியவர்கள் தூரநோக்கோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டு நிற்கின்றேன். காரணம் இதற்குப் பின்னால் ஒரு சில காரணங்கள் இருக்கின்றன.
சமயப் பிரச்சனைகள் இத்துடன் இன்னும் ஒரு சில பிரச்சனைகள் இங்கு அதிகமாக விரிசல் அடைந்து வருகின்றது. மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் குறிப்பாக சமயப் பிரச்சனை தலை விரித்தாடுகின்றது.
அத்துடன் பிரதேச வாதம் என்பது வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொடர்கின்றது. இவ்விரண்டும் எம் மத்தியில் தலைவிரித்தாடும் என்றால் ஏன் எதற்காக இத்தனை ஆயிரம் பேர் பலி கொடுத்தோம் என்ற கேள்வி எழுகின்றது. இவற்றையெல்லாம் நாம் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
இந்த பகுதியில் வேதம் சைவம் என்ற பிரச்சனை தலைதூக்கி நிற்கின்றது. இந்த பிரச்சனைகள் தொடருமானால் இன்னும் பத்து வருடங்களுக்குப் பின் கடந்த கால போராட்டம் உயிர் இழப்புக்கள் யாவும் விலை மதிப்பற்றதாக ஆகி விடும்.
கடந்த காலத்தில் போராட்டம் யுத்தத்தில் இறந்தவர்கள் சாதி சமயம் பார்த்து பிரதேசம் பார்த்து தங்கள் உயிர்களை இழக்கவில்லை. மாறாக அவர்கள் நமது மண்ணுக்காகவும் இனத்துக்காகவுமே ஏன் தங்கள் எதிர்கால சந்ததினர்களுக்காகவே தங்கள் உயிர்களை பணயம் வைத்தார்கள்
.
ஆகவே அவர்களின் உயிர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமானால் நாம் எமக்குள் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். கடந்த கால நிலையை நாம் ஒருமுறை திரும்பி பார்த்தால் எம்மிடையே ஒற்றுமையின்மையே நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
ஆயுதக் குழுக்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடியது பிரதேச வாதப் பார்வையில் நடந்து கொண்டது போன்ற செயல்பாட்டினால் பல பின்னடைவை சந்தித்தனர். இருந்தபோதும் எமது தமிழினத்தின் பிரச்சனைகளை உலகம் அறியச் செய்தவர்கள் எமது போராளிகளே என்பதை நாம் மறக்க முடியாது.
ஆகவே நாம் இப்பொழுது இருந்து ஒற்றுமையுடன் செயல்பட தொடங்கினால்தான் நாம் எமது எதிர்கால சந்ததினரை வாழ வைக்க முடியும்.
ஆகவே எல்லா இடங்களிலும் சந்திகளிலும் ஏட்டிக்கு போட்டியாக சிலை வைப்பதும் சுரூபம் வைப்பதும் இதனால் ஒரு கிராமம் இரு கிராமங்களாக பிளவுபட்டு சண்டை பிடிப்பதும். காண்கின்றோம். இவற்றை நிறுத்துவதற்கு பெரியோர்கள் நல்வழி காட்ட வேண்டும். அப்பொழுதுதான் எம்மில் ஒற்றுமை நிகழும். இங்கு பலர் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளாதது இதுவும் ஒரு காரணமாகும்.
மேலும் நமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் பல மில்லியன் ரூபாவை தாருங்கள் என நாங்கள் மத்திய அரசை கேட்பதைவிட முக்கிய பிரச்சனையாக இருக்கும் இவ் பிரச்சனைகளை இந்த அரசு செய்ய வேண்டும் என்றுதான் நாம் கேட்டு நிற்கின்றோம்.
அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது விடயமாக எமது மக்கள் நிம்மதியின்றி வீதிகளில் உறங்குவதும் சாப்பிடுவதுமாக இருக்கின்றார்கள்.
அடுத்து எமது தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். பொது மக்களின் காணிகள் தொடர்ந்து படையினரிடம் கைவசம் இருக்கின்றன. ஆகவே அபிவிருத்தி இன்று இல்லாவிட்டாலும் நாளை அதை அடைந்து விடலாம். ஆனால் இந்து மூன்று பிரச்சனைகளுக்கும் அரசு உடன் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என நாம் கேட்டு நிற்கின்றோம் என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

Friday, May 19, 2017

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம்.



மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம்.
(பிராந்திய செய்தியாளர்) 18.05.2017
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குத் தளங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம் மேற்கொள்ளுகின்றார். அவரை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மன்னார் ஆயர் இல்லத்துடன் இணைந்து மன்னார் மறைக்கல்வி நடுநிலையம் மேற்கொண்டு வருகின்றது.
பரிசுத்த பாப்பரரசரின் (வத்திகானின்) இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு பேராயர் பியாரினுயன் (Pஐநுசுசுநு NபுருலுநுN) ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்று சனிக்கிழமை (20.05.2017) மன்னாருக்கு விஐயம் மேற்கொள்ளுகின்றார்.
மன்னார் மறைமாவட்டத்தின் 43 பங்குகளில் பத்து வருடங்களுக்கு மேலாக தங்கள் பங்குகளில் மறையாசிரியர்களாக தொடர்ந்து பணிபுரியும் 190 மறையாரியர்களை கௌரவிக்க வேண்டும் என்ற நோக்குடன் மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்றே அவர் மன்னாருக்கு வருகை தருகின்றார்.
மன்னார் மறைமாவட்டத்தில் மறையாசிரியர்களை திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் கௌரவிப்பது இதுவே முதல் தடைவ எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாருக்கு வருகை தரும் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவரான பேராயரை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மன்னார் ஆயர் இல்லத்துடன் இணைந்து மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி எக்ஸ்.எவ்.றெஐpனோல்ட் அடிகளார் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட பேராலயத்துக்கு வருகை தந்ததும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட அருட்பணியாளர்களாலும் மறையாசிரியர்களாலும் இறை மக்களாலும் வரவேற்கப்பட்டதுடன் காலை 8.30 மணிக்கு பேராலயத்தில் திருத்தந்தையின் தூதுவரின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து திருத்தந்தையின் தூதுவர் மறையாசிரியர்கள் மத்தியில் உரையாற்றுவதுடன் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறையாசிரியர்களாக கடமைபுரியும் 190 மறையாசிரியர்களையும் அவர் கௌரவிப்பார்.
(வாஸ் கூஞ்ஞ)

Wednesday, May 10, 2017

வெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்

வதிவிட விசா என்பது விசேட தேவைகளுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.
முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும்.
அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளும் போது இந்த நாட்டு மக்களின் நலனுக்கு பங்கம் ஏற்படாது என உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இந்த விசா விநியோகிக்கப்படும்.
வதிவிட விசா பெறும் பொருட்டு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றில் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு விசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வரவேண்டியது அவசியமாகும்.
நாட்டுக்குள் நுழைவதற்கான விசா அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வேளையில், இலங்கையில் வதிவதற்காக விசா அனுமதி கோரக் கருதுவதாக நீங்கள் குறிப்பிட வேண்டுமென்பதோடு, அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டாளரது அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு விசாவினை வதிவிட விசாவாக மாற்றும் பொருட்டு பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.
விண்ணப்பப் பத்திர மாதிரியொன்றை பெறக்கூடிய இடம்
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம்
வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் இடம்
உங்கள் விசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.
வதிவிட விசாவுக்கான செல்லுபடியாகும் காலம்
வதிவிட விசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அத்துடன் அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம் தொடர்பான தகவல்கள்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், 
"சுகுறுபாய", 
சுபுத்திபுர வீதி(Subuthi Dr), 
பத்தரமுல்லை. 
இலங்கை.
தொலைபேசி: +94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்: +94-11-2885358
இணையத்தளம்: www.immigration.gov.lk

Tuesday, May 9, 2017

நாற்பது வருட காலமாக மடு பூமலர்ந்தான் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பாம் எம்.பி.சிவசக்தி ஆனந்தன்.



நாற்பது வருட காலமாக மடு பூமலர்ந்தான் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பாம் எம்.பி.சிவசக்தி ஆனந்தன்.
(பிராந்திய செய்தியாளர்) 04.05.2017
மன்னார் மடு பிரதேசப் பிரிவில் பூமலர்ந்தான் கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாற்பது வருட காலமாக அவர்கள் அங்கு வசிக்கின்றபோதும் அவர்களுக்கான குடியிருப்புக் காணிக்கான அனுமதிப் பத்திரம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் இவர்களும் நிலவிடுவிப்பு போராட்டத்தில் குதிக்க இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் கிழமை (02.05.2017) மன்னார் கீரி கடற்கரையில் வட மாகாண முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து 3.51 மில்லியன் ரூபா செலவில் சுற்றுல்லா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றபோது இதில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இங்கு தொடர்ந்து உரையாற்றும்போது
மன்னார் மாவட்டத்தில் இரு பெரிய வளங்கள் காணப்படுகின்றன. ஒன்று கடல் வளம் மற்றையது விவசாயம். கடல் வளத்தை எடுத்தோமானால் மிக பெரிய வளமாக மன்னார் மாவட்டத்துக்கு இயற்கை வளமாக அமைந்துள்ளது.
இதனால் இவ்விடத்தில் ஒரு சுற்றுலா மையத்துக்கு வட மாகாண முதலமைச்சர் தனது அமைச்சின் நிதியை ஒதுக்கி இவ் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு உந்தலாக அமைவதையிட்டு நான் இவ் மாவட்டத்தின் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் முதலமைச்சருக்கும் அவரின் அமைச்சின் அதிகாரிகளுக்கும் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து நிற்கின்றேன்.
மேலும் அமைச்சர் டெனிஸ்வரன் அவர் செல்லும் இடமெல்லாம் எம் மத்தியில் மத, இன ஒற்றுமை திகழ வேண்டும் என மிக துணிவுடன் வலியுறுத்தி வருகின்றார். இது உண்மையில் இக்காலக் கட்டத்தில் அவசியமான விடயமாகவே நான் இதைப் பார்க்கின்றேன்
.
நான் அண்மையில் மன்னார் மடு பிரதேச பூமலர்ந்தான் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இருக்கும் முப்பதுற்கு மேற்பட்ட மக்கள் மிகவும் கவலையுடன் எனக்கு தெரிவித்தார்கள். அதாவது இவர்கள் இக் கிராமத்தில் குடியேறி நாற்பது வருட காலம் எனவும் இந்த நாற்பது வருட காலத்தில் குடியிருக்கும் காணிக்கான அனுமதிப் பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் இந்த அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்காக நாங்கள் மடு பிரதேச செயலகத்துக்கு பல தடவைகள் ஏறி இறங்கியிருக்கின்றோம். அத்துடன் இது விடமாக நாங்கள் இன்னும் பலரிடம் சென்றிருக்கின்றோம். ஆனால் எங்களுக்கு குடியிருப்புக்கான அனுமதிப் பத்திரங்களை தர மறுக்கின்றார்கள் என்றனர்.
இதற்கு காரணம் இக் காணியானது மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்குரிய காணியாகும். இவர்களிடம் நாங்கள் கேட்கும்பொழுது அவர்கள் எங்களுக்கு கூறும் பதில் நீங்கள் இருக்கும் வரை இருங்கள் ஆனால் நாங்கள் அவற்றை உங்களுக்கு எழுதி தரமாட்டோம் என்கின்றனராம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் எனக்கு தெரிவிக்கையில் எமது பகுதிகளில் மக்கள் நில விடுவிப்புக்காக தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாற்பது வருட காலமாக குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதி பத்திரங்கள் கிடைக்கவில்லையே என்று நாங்களும் மடு வீதி சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்கப் போகின்றோம் என்ற அதிர்ச்சியான தகவலை எனக்குச் சொன்னார்கள்.
எங்கள் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி போராடுவது வேறுவிடயம். ஆனால் இந்த மக்கள் இவ்வாறான போராட்டம் ஒன்றில் குதிப்பார்கள் என்றால் எமக்கு ஒரு இக்கட்டான நிலை ஒன்று ஏற்படலாம்.
இதை நான் ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால் அமைச்சர் டெனிஸ்வரன் இன ஒற்றுமை மத ஒற்றுமைக்காக மிக துணிச்சலுடன் தெரிவிக்கும் இதேவேளையில் நாங்களும் எவ்வளவோ பிரச்சனையில் எங்கோ நிற்கின்றோம். இதனால் எமது மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றபோது எமக்குள் நாம் முட்டி மோதிக் கொண்டிருக்கக் கூடாது என்பதாகும்.
ஆகவே முதலமைச்சர் மற்றும் அவரின் அதிகாரிகள் மக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்காக நான் மக்கள் சார்பாக மீண்டும் நன்றி கூறி நிற்பதுடன் எமக்குள்ளே மிக நெருக்கமான ஒற்றுமையையும் கல்வி, பொருளாதாரங்களில் நாம் பலமாக எமது சொந்தக் காலில் நிற்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாங்கள் அவ்வப்போது அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்
.
இன்று முள்ளிக்குளம் மக்கள் தங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் நிமித்தம் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களுக்கு ஆதரவாக எமது மாவட்டத்திலிருந்து பரவலாக பலரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள். இதனால் அவர்களின் காணி விடுவிக்கப்பட்டது. இவ்வாறு நாமும் ஐனநாயக ரீதியில் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

Saturday, May 6, 2017

மன்னார் கீரியில் சுற்றுல்லா மையம் திறந்து வைப்பு

மன்னார் கீரியில் சுற்றுல்லா மையம் திறந்து வைப்பு
(பிராந்தி செய்தியாளர்) 02.05.2017
வட மாகாண முதலமைச்சரின்
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து 3.51 மில்லியன் ரூபா செலவில் மன்னார் கீரி கடற்கரையில் சுற்றுல்லா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய் கிழமை (02.05.2017) நடைபெற்றபோது அதிதிகள் பாண்ட் இசை வாத்தியங்களுடன் அழைத்து வரப்படுவதையும் வட மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைப்பதையும் இதில் வட மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வட மாகாணசபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
( வாஸ் கூஞ்ஞ)

Thursday, May 4, 2017

மன்னாரில் கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் அமைக்க தள்ளாடிக்கு அருகாமையில் நான்கு ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. அமைச்சர் nஐயவிக்கிரம பெரெரா



மன்னாரில் கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் அமைக்க தள்ளாடிக்கு அருகாமையில் நான்கு ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. அமைச்சர் nஐயவிக்கிரம பெரெரா
(பிராந்திய செய்தியாளர்) 28.04.2017
மன்னார் தள்ளாhடிக்கு அருகாமையிலுள்ள பறவைகள் சரணாலயம் பகுதியிலுள்ள நான்கு ஏக்கர் நிலத்தை கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன் இந்த நிலையம் மிருகத்துக்காக மட்டுமல்ல இயற்கைக்காகவும், உல்லாசப் பயணிகளுக்காகவும் மாற்றாற்றல் கொண்டோரின் நலன் கருதியும் நவீன முறையில் அமைக்கப்படும் என நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெரா இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனமும், மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கமும் இணைந்து மன்னார் முருங்கன் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கத்தில் கழுதைகள் மூலமான உளநல சிகிச்சை நிலையம் ஒன்று வியாழக்கிழமை (27.04.2017) நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெராவினால் திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனம் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு nஐரமிலியனகே மற்றும் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கப் பணிப்பாளர் அருட்சகோதரி nஐhஸ்பீன் மேரி ஆகியோரின் முயற்சியால் இடம்பெற்ற இவ் விழா முன்னாhள் மன்னார் நகர சபை உப தலைவர் Nஐம்ஸ் யேசுதாசன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிலையமானது ஆசியக்கண்டத்திலேயே முதலாவதாக நிர்மானிக்கப்பட்டு மனநலம் குன்றிய சிறார்களுக்கான சிகிச்சை நிலையமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சின் அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெரா இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு உரையாற்றுகையில்
இன மத வேறுபாடின்றி நாம் எல்லோரும் இவ்விடத்தில் ஒன்றுகூடியிருக்கின்றோம். அதுவும் விலங்குகளுக்கான அமைச்சர் என்ற வகையில் என்னுடன் நீங்கள் கூடியிருப்பது மகிழவுக்குரியது. அத்துடன் இன்றைய இவ் நிகழ்வை நான் ஒரு பெரிய நிழ்வாக எண்ணி மகிழ்வு கொள்ளுகின்றேன்
.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் nஐரமிலியனகே இலங்கை பெரும்பான்மை இனத்தின் நாமத்தை அவர் கொண்டிருந்தாலும் ஐம்பது வருட காலமாக அவர் அவுஸ்ரேலியாவில் வசித்து வந்துள்ளார்.
இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு மன்னார் பகுதிக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்த்தும் அத்துடன் இங்குள்ள கழுதைகளின் சூழ்நிலைகளைம் அவதானித்துள்ளார். அந்த நேரத்தில் என்ன செய்யலாம் என சிந்தித்தவராக இருந்தாலும் எந்தக் காரியத்தையும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தும்போது எங்கேயோ இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும் என்பார்கள்
அவ்வாறு அசோக் சக்கரவத்தியைப்போல இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரு பாலமாக திகழ்ந்ததுபோல இங்குள்ள கழுதைகளைக் கொண்டு மனித நேயத்தை வளர்த்து எடுப்பதற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்து செயல்பாட்டில் இறங்கியிருக்கும் வைத்தியர் ரமேஷ;குமாரை நான் நினைக்கின்றேன்
இந்த பூமியிலே மனிதர்கள் வாழ்கின்றதுபோல மிருகங்களும் பறவைகளும் நடமாடுகின்றது. மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ வேண்டும் என அனைத்து சமயங்களும் எமக்கு போதிக்கின்றது. ஆனால் நாம் தவறான வழியில் இவைகளை அழித்து வருகின்றோம்
.
இன்று அவுஸரேலியாவிலுள்ள nஐரமிலியனகே, இந்தியாவிலுள்ள வைத்தியர் ரமேஷ;குமார், Nஐர்மனியிலுள்ளவர்கள் இவர்கள் எல்லாம் ஏன் இங்கு வந்திருக்கின்றார்கள்.
இவர்கள் மனித நேயத்துடன் இருந்து செயல்படுத்தும் நோக்கிலேயே வந்திருக்கின்றார்கள். மன்னாரைப் பொறுத்தமட்டில் இங்கு எல்லா வளமும் இருக்கின்றன. நில வளமுண்டு, கடல் வளமுண்டு, வயல் வளமுண்டு இவ்வாறு பல்வேறு வளங்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வாறு நிறைந்த வளங்கள் இங்கு இருந்தாலும் இவைகளை நாம் நாளாந்தும் அழித்து வருவோமானால் எதிர்காலத்தில் நாம் இங்கு இருக்க முடியாது. நாம் தொடர்ந்து இங்கு வாழ வேண்டுமானால் இயற்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
.
இங்குள்ள பறவைகள், மிருகங்கள், காடுகள், மீன்கள் போன்ற இயற்கை வளங்களுக்கு எமது உதவிகள் தேவையில்லை. இப்பொழுது நாம் மழை இல்லையே என்று வேதனைப் படுகின்றோம். இதற்கு காரணம் நாம் இயற்கைக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவதே ஆகும்.
நாம் எதாவது குற்றம் புரிந்து நீதிமன்றம் சென்றால் அங்கு சட்டத்தரனிகள் மூலம் குற்றங்களிலிருந்து தப்பித்து வரலாம். ஆனால் எமது கண்களால் பார்க்க முடியாத ஒரு சக்தி இருக்கின்றது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இங்குள்ள ஒவ்வொரு மதத் தலைவர்களும் இப்பகுதி மக்களுக்கு நாளாந்தம் உணர்த்த வேண்டும் என்பதை நான் தயவாக வேண்டுகின்றேன்.
நான் நீர்பாசன அமைச்சராக இருந்தபொழுது 2002ம் ஆண்டில் பிரபாகரனுக்கும் பிரதம மந்திரி ரணிலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நடைபெற்றபோது மன்னார் கட்டுக்கரைக் குளத்தில் நீர் இல்லாது வரண்டு காணப்பட்ட நேரத்தில் அனுராதபுரத்திலிருந்து இங்கு நீர் வரவழைப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன். இதனால் அப்பொழுது இங்குள்ள வேளாமைகள் பாதுகாக்கப்பட்டது.
இதையெல்லாம் நான் இங்கு ஒரு அமைச்சராக மட்டும் இருந்து பேசவில்லை. மாறாக மனித நேயம் கொண்டவனாக இருந்தே இவற்றை இங்கு கூறுகின்றேன். ஆகவே நாம் ஒவ்வொருவரும் நமது எதிர்கால சந்ததினர்களுக்காக இயற்கை மனித நேயம் கொண்டவர்களாக மாற வேண்டும் என நான் உங்களை வேண்டி நிற்கின்றேன்.
ஆகவே நான் மீண்டும் ஒவ்வொரு மதத் தலைவர்களைப் பார்த்து வேண்டுவது ஆன்மீகத்துடன் மனித இயற்கை நேயத்தையும் வளர்த்துக் கொள்ள மக்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும். இவைகள் மதத் தலைவர்களால்தான் முடியும். இதற்கு எனது அமைச்சும் உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கின்றது.
நானும் இன்னும் ஒரு அமைச்சரும் இணைந்து மந்திரி சபையில் ஒரு தீர்மானம் மேற்கொண்டிருன்றோம் அதாவது ஒவ்வொரு பாடசாலையிலும் சாரணியர் இயக்கம் கட்டாயம் ஆரம்பிக்க வேண்டும் என்று. ஏனென்றால் பாடசாலைகள், வீடுகள், கிராமங்களிலுள்ள மனிதர்கள் மட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமானால் சாரணியர் இயக்கம் செயல்பட வேண்டும். இதை மன்னாரில் வெகுவிரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பொழுது சபையிலிருந்து நீங்கள் பெண்கள் சாரணியத்தைப்பற்றி தெரிவிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் அதற்கு மன்னிப்பு கோரி பெண்கள் சாரணியம் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பொழுது பெண்கள் கைகள்தானே ஓங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஆண்கள் அடுப்படி நோக்கி செல்ல பெண்கள் உத்தியோகம் பெற்றுச் செல்லும் நிலை எற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இருந்தும் நாம் ஒவ்வொருவரும் சமூகத்துக்கு அர்ப்பணிப்பு உள்ளவர்களாக வாழ்வோம் என்றார்.
அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் நான் இதைப்பற்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். அதாவது மன்னார் தள்ளாhடிக்கு அருகாமையிலுள்ள பறவைகள் சரணாலயம் பகுதியிலுள்ள நான்கு ஏக்கர் நிலத்தை கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றார்.
இது சம்பந்தமாக எனக்கு ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் இவ் நிலையத்தின் திட்டங்களை முன்னெடுக்க உதவி புரிவார். இந்த நிலையம் மிருகத்துக்காக மட்டுமல்ல இயற்கைக்காகவும், உல்லாசப் பயணிகளுக்காகவும், அத்துடன் இங்கு டீப்திக்கா என்ற காது கேட்காத வாய் பேசாத சிறுமி பாடலுக்கு ஏற்றவாறு மிக பிரமாதமாக நடனம் ஆடினாள். இவ்வாறான பிள்ளைகளுக்காகவுமே இவ் நிலையம் நிர்மானிக்கப்பட இருக்கின்றது.
இந்த நிலையமானது மனிதரும் மிருகங்களும் மனதால் ஒன்றித்து செயல்படும் நிலையமாக நவீன முறையில் அமைக்கப்படும். இங்கு நான் மாற்றாற்றல் உள்ளவர்கள் என குறிப்பிட விரும்பவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு அங்கம் குறைபாடு என்றால் மாற்றாற்றல் உள்ளவர் என பெயர் சூட்டிவிடுகின்றோம். ஆனால் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி செயல்பாடு அற்றவர்களாக இருப்போர் மாற்றாற்றல் என சொல்ல முடியாதா?
மன்னாரில் போதைப் பொருட்கள் அதிகமாக கடத்தப்படும் இடமாக நான் கேள்விப்படுகின்றேன். இது எதிர்கால சந்ததினரை வெகுவாக பாதிப்படையும் நிலைக்கு மன்னாரை தள்ளிவிடும். ஆகவே வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் இங்கு இவ் மேடையில் அமர்ந்து இருக்கின்றார். அவரிடம் நான் வேண்டியிருப்பது இவ் போதைப் பொருட்கள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். உண்மையில் இது பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரால் மட்டும் முடியாது இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து இவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டும்.
பெண்கள் சாரணியம் வேண்டும் என்று பெண்கள் இங்கு குரல் கொடுத்தீர்கள் அல்லவா அகவே பெண்களாகிய உங்களிடம் நான் வேண்டுவது நீங்கள் தலைவர்களாக இருந்து இவற்றை செயல்படுத்த முயற்சியுங்கள்.
மாற்றாற்றல் பிள்ளைகளுக்காக போக்குவரத்துக்கு பஸ் ஒன்று கேட்கப்பட்டது. இது தற்பொழுது உடன் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கின்றபோதும் மன்னார் இலங்கை போக்குவரத்து சபையுடன் நான் உடன் பேசி இவர்களின் போக்குவரத்துக்கான நடவடிக்கை எடுத்துத் தருவதாக தெரிவித்தார். இருந்தும் இவர்களுக்கான பஸ் ஒன்று பெறுவதற்கும் தான் ஆவண செய்வதாக தெரிவித்தார்.
மன்னாரில் வறுமையை ஒழிப்பதற்காகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சட்டத்துக்கு மாறாக பறவைகள் விலங்குகள் மன்னார் மக்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அணைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(வாஸ் கூஞ்ஞ)

மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர் முள்ளிக்குளம் மக்கள்

மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர் முள்ளிக்குளம் மக்கள்
(பிராந்திய செய்தியாளர்) 30.04.2017
கடந்த பதினொரு வருடங்களாக நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் போராட்டங்கள் அத்துடன் 38 நாட்களாக தொடர்ச்சியாக பெண்கள் தலைமைத்துவம் கொண்டு முள்ளிக்குளம் மக்கள் தங்கள் பூர்வீக கிராமத்துக்குள் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி நடாத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் காரணமாக உயர்மட்ட பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து முள்ளிக்குளம் மக்கள் தங்கள் கிராமத்துக்குள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதும் மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.
இவ் சம்பவம் சனிக்கிழமை (29.04.2017) இடம்பெற்றுள்ளது
.
மன்னார் முள்ளிக்குளம் மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு அவர்களின் பூர்வீக பகுதியிலிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு பின் 2012ம் ஆண்டு மீள்குடியேறுவதற்காக அங்கு மீண்டும் சென்றிருந்தபோதும் இவர்களின் பூர்வீக குடியிருப்புக்களை கடற்படையினர் ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை மீள்குடியேற விடாது தடுத்து வந்திருந்தனர்
இதனால் இவ் மக்கள் முள்ளிக்குளத்துக்கு அருகாமையிலுள்ள மலங்காடு என்னும் காட்டுப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்து வந்தனர்.
அத்துடன் பாடசாலை, ஆலயம், விவசாயக் காணிகள் குடியிருப்பு வீடுகள் ஆகியன கடற்படையினரின் ஆக்கிரமிப்பு இடங்களுக்குள் இருக்கின்றன எனவும் மாணவர்கள் பொது மக்கள் பாடசாலை, ஆலயத்துக்கு சென்றுவர கடற்படையினர் அனுமதி வழங்கியிருந்தபோதும் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்து வந்ததாகவும் இவ் மக்கள் கவலை தெரிவித்தவர்களாக முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை மூலம் அரசியல் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு வந்தன.
பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் இவ் மக்களால் காலத்துக்கு காலம் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் ஏனைய இடங்களில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த காணிகள் பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அறிந்து மீள்குடியேறுவதற்காக தங்கள் பூர்வீக இடத்துக்கு வந்தும் எங்களை மீள்குடியேற விடாது தடுத்து வரும் கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் 23.03.2017 முதல் இவ் கடற்படை முகாமுக்கு எதிரே கடந்த 38 தினங்களாக மரத்துக்கு கீழ் பதாதைகள் ஏந்தியவர்களாக 'எமது பூர்வீக காணி எமக்கு வேண்டும் 11 ஆண்டு அகதி வாழ்வு போதும் கடற்படையே வெளியேறு எமது நிலத்தை நாம் மீற்கும் வரை அறப்போராட்டம் தொடரும்' என்ற பதாதைகள் ஏந்தியவர்களாக இவ் போராட்டத்தை இராப்பகலாக இருந்து பெண்கள் தலைமைத்துவத்தில் தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இந் நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அண்மையில் பாராளுமன்றத்தில் எழுப்பிய குரலைத் தொடர்ந்தும் பிரதமர், ஐனாபதி ஆகியோருடன் கொண்ட தொடர்பை முன்னிட்டும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் கொழும்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயர் இல்ல பிரதிநிதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வன இலாகா அதிகாரிகள், முள்ளிக்குளம் கிராம பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே சனிக்கிழமை (29.04.2017) முள்ளிக்குளம் முகாமில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இவ் கிராமம் உடன் விடுவிக்கப்பட்டு தற்பொழுது இவ் மக்கள் கிராமத்துக்குள் மீள் குடியேற சென்றுள்ளனர்.
இவ் அனுமதி கிடைக்கப் பெற்றதும் சனிக்கிழமை (29) மூன்று மணியளவில் கவனயீர்ப்பு முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகள் அணைத்தையும் நீக்கிவிட்டு இவ் போராட்ட இடத்தில் வைத்து வழிபட்டு வந்த தேவ அன்னையின் திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக தங்கள் கிராமத்துக்குள் செபமாலை பவனியுடன் சென்று ஆலயத்தினுள் தங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (30.04.2017) இவ் கிராம மைந்தன் அருட்பணி சுபீன் றெவ்வல் (அ.ம.தி) அடிகளார் தலைமையில் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி மாக்கஸ் அடிகளார், பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் தவராஐ; அடிகளாருடன் அவ் கிராம மக்கள் இறைவனுக்கு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுத்ததுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், இதன் உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஐp.குணசீலன், சிராய்வா ஆகியோரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)