Thursday, June 28, 2018

வாடைக்காற்று ஆலமரம்! கடற்படைத்தளமாக மாறப்போகின்றதா?

வாடைக்காற்று ஆலமரம்! கடற்படைத்தளமாக மாறப்போகின்றதா?
பேசாலை வடக்கு கடற்கரை ஓரமாக, நான்காம் வட்டாரத்தை அண்மித்த பகுதி, அதாவது தற்போது கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி, துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடி க்கை மேற்கொளப்படுவதாக தகவல்கள் வெளிவந் துள்ளன. அதற்கான நிலத்தை, நில உரிமையாளர் களிடம் இருந்து வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அறியமுடிகி ன்றது. உண்மையில் அமையப்போவது என்ன? 

                                                            ஒருசாரர் கருத்துப்படி, சிறியரக துறைமுகம் அமையவிருப்பதாக கூறுகி ன்றார்கள். சிலரோ இழுவைப்படகுகள் காற்று க்காலங்களில், பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஒரு படகுத்தளம் Yatch அமையவிருப்பதாக சொல்கின் றார்கள். இதில் இருந்து பேசாலை மக்களுக்கு சரி யானதொரு விளக்கம் இல்லை என அறியமுடிகின்றது. 

                                                                பேசாலைக்கடற்கரை ஓரம் அதாவது பாடு என்று அழைக்கப்படுவது பேசாலை மக்களுக்கு சொந்தமானது! அத் தோடு பேசாலை மக்கள் சிலரின் நிலங்களும் இதற்காக பாவிக்கப்பட இருப்பதாக அறியமுடிகின்றது. அவ்வாறு நிலம் உரிமையாளரிடம் இருந்து வாங்கப்படுமானால், அதன் மீதுள்ள உரிமையும், அதனை ஒட்டிய பாட்டு உரிமையும் இழக்கப்படும்! இந்த படகுத்துறை யாரால் கட்டப்படுகின்றது? வெளிநாட்டு நிறுவணத்துக்காகவா? அல்லது அரசாங்கத்துக்காகவா? என்பதில் தெளிவு மக்களுக்கு இல்லை. அப்படி அது அமைக்கப்பட்டால், யாருடைய படகுகள் கட்டப்படும்? தனியே பேசாலை மக்களுக்காகவா? அல்லது எல்லோருக்காகவுமா? என்பது பற்றிய தெளிவு பேசாலை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். 

                                                                            புயல் ஆபத்துகாலங்களில், மற்றைய பகுதிகளில் இருந்து வரும் படகுகளை காப்பாற்றவேண்டும் என்ற மீனவ ர்களின் தார்மீக அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கப்படலாம் அதில் தவறில்லை! ஆனால் நாளாந்த பாவனைக்காக எல்லோருக்கும் இடம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அதுபற்றி பேசாலை மக்கள், சிந்திக்க வேண்டும்? இது பாடு சம்பந்தமான உரிமை பிரச்சனை என்பதை என் உறவுகளே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! 

                                                                  அதுபோக ஏற்கனவே அந்த இடத்தில் ஒரு தற்காலிக கடற்படைத்தளம் இருக்கின்றது, எனவே கடற்படை களங்கள் தங்குவதற்கான உள் நோக்கம் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படலாம்! என்வே நாம் விழிப்பாக இருக்கவேண்டும்! நீங்கள் ஏற்கனவே அறிந்திரு ப்பீர்கள் சாகர்மாலா என்ற திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டம் தனியே இந்தியா மட்டுமல்ல, மாலைதீவு, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா என்பன உள்வாங்கப்படுகின்றது. அதாவது வங்காள விரிகுடா கடலை ஆழப்படுத்தி பல துறைமுகங்களை அமை த்து, கடல்வழி இன்னும் இதர பல முயற்சிகளுக்காக்வும் சாகர்மால திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த சாகர்மாலாவின் உள்நோக்கம், வங்காள விரிகுடா,இந்து சமுத்திரம் போன்ற பகுதியில், சீனாவின் முத்துமாலை திட்டத்தையும், சீனாவின் வர்த்தக கடற்பாதை, மீன்பிடி இவைகளை கட்டுப்படுத்துவதே அடிப்படை அம்சமாகின்றது. அந்தவ கையில் சிறியதும், பெரியதுமான துறைமுகங்கள் இந்தியா இலங்கை, மாலைதீவு, மலேசியா இதுபோன்ற நாடுகளின் கரையோரம் அமைய இருக்கின்றது. அதில் ஒரு திட்டமே, இரமேஸ்வரம் ஊடாக தலைமன்னார் பாதை அமைப்பது இடம்பெறுகின்றது. இவை எல்லாம் பல்தேசிய நிறு வணங்கள் நிதி குவித்து செயல்படுத்தி வருவதற்கான நிறைய ஆதார ங்கள் உண்டு. ஏற்கனவே தலைமன்னார் நடுக்குடா கரையோரம் பிரமாண்டமான ஹோட்டல் அமைக்கப்படுவது இதற்கான கட்டியமாக அமைகின்றது! என்வே பேசாலை மக்கள் நன்றாக சிந்தித்து, அமையவி ருப்பது என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

Thursday, June 14, 2018

மக்கள் புரட்சியாளன் சேகுவேராவின் பிறந்த தினம் 14 யூன் 1928 - பேசாலைதாஸ்

மக்கள் புரட்சியாளன் சேகுவேராவின் பிறந்த தினம் 14 யூன் 1928  பேசாலைதாஸ்

                   இன்றுடன் சே குவேரா பிறந்து 90 வருடமாகின்றது. சர்வதேச புரட்சியாளன் சேகுவேராவை நினைவு கூறுவது ஒவ் வொரு சமூக சிந்தனையாளனின் கடமையாகின்றது. சே Chez  என்றால் ஸ்பானிய மொழியில் மக்களுடன் என்று அர்த் தம் எனவே மக்கள் தலைவன் குவேராவை இன்று நாம் நினைவு கூறுவோம்  கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சி யாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசா ரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. 

                                                                டாக்டராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் பிறந்த நாள் இன்று. அவரது வாழ்வின் முக் கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகள் சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ் டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமை ந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.

                                                  1951இல் மருத்துவம் படித்துக்கொண்டி ருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் ‘தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்’ என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

                                         பயணங்களில் பேரார்வம் கொண்டிருந்த சே குவேரா, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பே, ஜன வரி 1950இல் அர்ஜென்டினாவில் தனியாகவே தனது சிறிய எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சுமார் 4500 கிலோமீட்டர் பயணித்திருந்தார். 1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா. அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமய மாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.


                                                கியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் யூனியன் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய் தார் சே குவேரா. 1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூ யார்க் சென்றது. அப்போது ஐ.நாவில் உரையாற்றிய சே தென் னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெ ரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.

                                                அதே ஆண்டு இறுதியில் தனது மூன்று மாத சர்வதேச சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சே குவேரா சீனா, வடகொரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கியூபா அர சின் வெளியுறவுத் தொடர்பை பலப்படுத்தினார். 1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகர் அல்ஜெய்ர்ஸ்-இல் ஆசிய மற் றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்க ளுக்கு எந்தத் தகவலும் இல்லை.

                                                      அதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய ‘பிரியாவிடைக் கடி தத்தை’ பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டார். கியூபப் புரட்சி க்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தி யிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.◾அந்தக் காலகட்டத்தில் காங்கோவின் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் காங்கோ சென்றிருந்தார் சே.


காங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனா ய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங் களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார். அதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியி ருந்த சே, ஒரு போலி கடவுசீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.                                                      1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை.◾பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானத் தளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவ ரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப் பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.