Thursday, January 17, 2019

சிறைச்சாலைகளும் சித்தரவதைகளும்,,,,,


சிறைச்சாலைகளும்                                          சித்தரவதைகளும்,,,,, பேசாலைதாஸ்

                                                     சிறைச்சாலை என்பது குற்றம் செய்தவர்களை வதைக்கும் சிறைக்கூடம் என்பது இலங்கை போன்ற நாடுகளில் உள்ள காவல்துறை  மற்றும் சிறைக்காவலர்களின் கருத்தாக உள்ளது, இது உண்மையில் மனோவியாதியின் வெளிப்பாடாகும். சிறைத்தண்டனை யின் உண்மையான நோக்கம், குற்றம் செய்தவர்கள், தாங்கள் செய்த
குற்றத்தின் பக்கவிளைவுகளையும், அதா னல் பாதிக்கப்பட்டவர்களின் துயரங் களை சிந்தனை செய்து, அப்படிப்பட்ட துயரங்களுக்கு, விளைவுகளுக்கு தங் களால் ஆன பரிகாரங்கள் எது என் பதை தெரிந்து கொண்டு, குற்றவாளி களை சிறந்த பிரஜைகளாக மாற்றுவதே சிறைக் கூடங்களின் முக்கிய பணியாகும். அதுவே முக்கிய நோக்கமாகவும் அமையவேண் டும். 

                                                                     நோர்வே நாட்டில் மனோவியாதியினால் உந்தபட்ட அந்நாட்டின் பிரஜை ஒருவர் தன்னை ஒரு ஹீரோவாக நினைத் துக்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை துப்பாகியால் சுட்டு வீழ்த்தினான், அப்படிப்பட்ட ஒரு கொலையாளிக்கு தேவையான சட்ட தரணிகள் வசதி செய்து கொடுக்கப்பட்டு, மிகவும் கெளரவமான முறை யில் நோர்வே பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜராக்கி விசார ணைகள் மேற்கொண்டார்கள், பின்னர் அவருக்கு ஆயுள்கால தண்டனை வழங்கினார்கள், 

                                                   கைதி, குற்றவாளி என்பதற்கு மேலாக அவர்கள் மனிதன் என்ற சிந்தனையை மனதில் நிறுத்தவேண்டும், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகுவதற்கு முக்கிய காரணம் பொருளாதார பிரச்ச
னைகளும், சில சமூக கட்டுப்பாடுகளுமே ஆகும். எனவே குற்றங்கள் பெருகுவதற்கான தார்மீக பொறுப்பை அந்த நாட்டின் அரசாங்கம் பொறு ப்பெடுத்து குற்றங்கள் பெருகாமல் இருப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அண்மைக்காலமாக இலங்கைச்சிறைக ளிலே சித்திரவதைகள் தாராளமாக இடம் பெறுகின் றது, 1983 ஆண்டு வெளிக்கடையில் நடைபெற்ற சிறைச்சாலை படுகொலைகள், இலங்கை க்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின,.

                                           தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் சித்திரவ தைகள் இடம்பெறுகின்றன, இதைவிட கொடுமை, சிறைச்சாலைகளில் சில சமூக விரோதிகள், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். சில சிறைக்கைதிகள் அரசியல்வாதிகளனால், அரசியல் படுகொலைக் கருவிகளாக பாவிக்கப்படுகின்றனர். இதனால் சட்டத்தின் பார்வையில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மண்ணை தூவுகின்றார்கள். இந்த நிலை முற்றாகமாறவேண்டும்!  அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த அதிர்சியான காணொளிக்காட்சி அதிர்ச்சியளிக்கின்றது. அதுபற்றிய மேலதிக விபரம் இதோ!

தென்னிலங்கை சிறையில் கைதிகள் சித்திரவதை:வெளியான ஆதாரம்! (இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளினால் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகி யுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக, மதத்திற்கான மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே சேனக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ள்ளார். 2011 ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் கூட 20 இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் சித்திரவதைக்குட்படுத்தப்பட் டுள்ளனர்.இதேவேளை இரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்திரவதைக்குள் ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 

                                         இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை பொறுப்பதிகாரிக ளால் இழைக்கப்பட்டுள்ள சித்திரவதையை வெளிப்படுத்தும் காணொளி ஆதாரம் கிடைக்க்பபெற்றுள்ளது. குறித்த கைதிகளை பார்வையிட வரும் உறவுகள் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடா க நாடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

Thursday, January 10, 2019

பெண்ணடிமை தீரும் வரை,,,,,,,,,,

பெண்ணடிமை தீரும் வரை,,,,,,,,,,  பேசாலைதாஸ்

பெண்ணடிமை தொடரும் வரை, மண்னடிமை மறையாது!" இது பாரதியின் கூற்று, ஒரு சமூகம் விடுதலை பெறவேண்டுமானல், அங்கே ஒரு சமூகம் பெண்ணடிமை முற்றாக மறையவேண்டும், ஈழப் போராட்டத்தில் விடுதலைப்புலிக ளினால் பெண்கள் போராளிகளாக மாறி, களத்தில் சாதனைபடைத்தா ர்கள், இருந்தபோதும் அரசியல் உயர்மட்ட பேச்சுக்களில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்ற யதார்த்த உண்மையை, ஒஸ்லோ வில் நடைபெற்ற புலிகளுக்கும்,இலங்கை அரசுக்குமான பேர்ச்சுவார்த் தைகளில் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கம்ஸாயினி டாண் தொலைக்காட்சியில் கூறினார், அவர் புலிகளின் மீது ஒரு குற்ற சாட்டாக இதனை கூறவில்லை, மாறாக பெண்கள் அரசியல் தலைமத் துவத்தில் ஈடுபடுவது தமிழ் தரப்பிலே மிக மிக குறைவாக இருக்கின்றது என்பதனையே மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றார்.

                                                            எந்தவொரு நாட்டில் பெண்களின் அரசியல் முகாமைத்துவம் மேலோங்கியுள்ளதோ அந்த நாடு சமூக பொருளாதார பொதுப்பணிகளில் சிறந்து விளங்கும் என்பதற்கு நோர்வே எடுத்துக் காட்டாகவிளங்குகின்றது. இன்று சமூக நலன் பேணும் நாடாகவும், சந் தோசமான நாடாகவும் உலகிலே முதல்தர நாடாக நோர்வே விளங்கு வதற்கு முக்கிய காரனம், பெண்களின் சுதந்திரம், அவர்களின் ஆளு மையை நோர்வே நாடு அபரிமிதமாக வளர்த்துள்ளது என்பதே ஆகும், நோர்வே நாட்டில் ஒஸ்லோ நகரை பொறுத்தவரை, பல இன மக்கள், பல நாட்டு மக்கள் வாழும் பல்லின சமூகம் கொண்ட ஒரு நகராகும், இங்கு வாழும் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப சகலவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன, கிடைக்கின்றது. ஒரு நாட்டின் வளம் எவ்வாறு பங்கிடப்படுகின்றது என்பதில் இருந்தே அந்த நாடு மக்களின் நாடாக கருத முடிகின்றது, அதேவேளை பெண்களின் உரிமைகள், அவர்களுக் கான பங்குகள் அவர்களுக்கு வழங்க்கப்படும் போது அந்த நாடு வள மான நாடாக வளர்ச்சியடையும் என்பதில் கம்ஸிகாவுக்கு மாற்று கருத் துகிடை யாது என நான் கருதுகின்றேன்.
                                                            

                                                                     ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என குடும்ப மட்டத்தில் சமமின்மையோடு வளர்க்கப்படுவாதாலேயே பெண் பிள்ளை கள் தமது ஆளுமையை இழக்கின்றனர், அதனால் ஒரு நாடும் சமூகமும் தாழ்ந்து போகின்றது! பெண்பிள்ளைகளை சிறுமைப்படுத்தி வளர்ப்ப தைவிட, அவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுத்து, "சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்ற பாரதியின் கனவை நோர்வே பெண்கள் யதார்த்தமாக்கியதாலே நாடும் சமூகமும் உயர்வுகண்டுள்ளது, அந்த மரபில் வந்தவர்தான் கம்சாயினி அவர்கள், இன்று அவர் ஒஸ்லோ உதவி மேயராக இருக்கின் றார். இன்னும் அவர் வளர்வார், புலம்பெயர் தமிழருக்கும், நோர்வே நாட்டுக்கும் பெருமையை தேடித்தருவார்,  அரசியல் என்றால் என்ன வென்று புரியாதா சில கிறுக்குகள், கம்ஸாயினியை தரக்குறைவாக முக நூலிலே பதியவிட்டுள்ளனர், அவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் என நாம் பகிரங்கமாக கோரிக்கைவிடுகின்றோம். 

                                                               கருத்துக்களை மதித்து ஜனநாய மரபோடு, புதிய அரசியல் கலாச்சாரபண்புகளோடு வாழ பழகவேண்டும்! கம்ஸா யினியின் நோர்வே கலாச்சார பண்புகளை, அவரின் தனிமனித வாழ் வை தாக்குவது புலம் பெயர்ந்து வாழும் எங்களின் பெண்பிள்ளைகளின் மீதான தாக்குதலாகும், ஏனெனில் கம்சாயினி அவர்கள் எங்கள் பெண் பிள்ளைகளின் உந்து சக்தியாக இன்று விளங்குகின்றார்.

                                                            கம்சாயினி அவர்கள் இலங்கைக்கு அண்மை  யில் விஜயம் செய்த பொழுது, டண் தொலக்காட்சிக்கு கொடுத்த பிரத் தியேகமான நேர்முக உரையாடலில், ஒரு கருத்தை மிக தெளிவாக விள க்கினார், அதாவது ஒரு பெண்பிள்ளையை பார்த்து, நீ கவனமாக சமூ கத்தில் இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்பதைவிட, ஆண்கள் எல் லோரும் கன்னியமாக வாழ்ந்தால் பெண்கள் மீதான அத்துமீறல்கள் பாலியல் வன்கொடுமைகள் நிகழாது இருக்கும், ஏனெனில் இந்த கொடு மைகளுக்கு காரனம் ஆண்களே அன்றி பெண்கள் இல்லை. 


                                                       பெண்களை இன்னமும் சமூகத்தில் பின்னுக்கு வைப்பதாலயே நாடும் சமூகமும் பின் தங்கியுள்ள்து என்பதை சாதனை படைத்த ஒரு பெண்ணாக தாயகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுத்து சொல்லவே அவரது தாயக விஜய‌ம் இருந்தது அத்தோடு சிங்களவர், தமிழர் முஸ்லிம் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை என்ற நிலை வரவேண்டும் என்பதே கம்சாயினியின் எண்ணம் சிந்தனை நோக்கு, வளர்க, அவர் பணி சிறக்க அன்புடன் பேசாலைதாஸ்

தண்ணீர் தண்ணீர்,,,,,,,,

தண்ணீர் தண்ணீர்,,,,,,,, பேசாலைதாஸ்

                                                      கே. பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் படத்துக்கு ஏதோ விமர்சனம் எழுதப்போகின்றார் என நினைக்கின்றீர் களா? விடயம் படம் அல்ல, தண்ணீர் தான், அதுவும் மழை நீர்தான், இனிமேல் மழைத்தண்ணீரை சேகரித்துவைத்தால், அல்லது அதை பாவித்தால் தண்டனைக்குறிய குற்றமாக விரைவில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் Suez என்ற நிறுவணம் தான் இதற்கு காரனம்! இந்த நிறுவணம்  Water managment அதாவது நீரை மையமாக கொண்டு இயங்கும், உலகவங்கியின் ஒரு நிறுவணமாகும்.
                                           நல்ல குடி நீருக்கு தற்போது பணம்செலுத்தவேண்டிய ஒரு கட்டாயம் இப் போது கிராமவாசிகளுக்கும் வந்துவிட்டது. தண் ணீர் பிரச்சனை மாபெரும் பிரச்சனையாக தற் போது எல்லா நாட்டிலும் உருவெடுத்துள்ளது. சென்றவருடம் தென்னாபிரிக்கா குடிதண்ணீர் இல்லாமல் தவித்ததை யாவரும் அறிந்திருப்பீர் கள். இந்த தண்ணீர் இப்போது அரசியலாகவும், வியாபாரமாகவும் மாறிவிட்டது, காற்றும் தண் ணீரும் Commom Comodity  பொதுப்பொருளாக இருந்துவந்துள்ளது, இதில் தண்ணீர் தற்போது Commercial comodity வியாபார பொருளாக மாறிவிட்டது. விரைவில் காற்றும் ஒரு வியாபார பொருளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

                                                               சுத்தமான குடிதண்ணீரை தட்டுப்பாடு
இல்லாமல் தருகின்றோம், விவசாயத்துக்கு தண் ணீரை தாராளமாக தருகின்றோம் என்ற தோர ணையில் இந்த சுயேஸ் என்ற தண்ணீர் நிறுவ ணம் நாடுகளுக்குள் கால்பதிக்க முனைகின்றது. போத்தல் தண்ணீர் வியாபாரிகள் தொடக்கம், அரசியல்வாதிகள் உட்பட எல்லோரும் இந்த தண்ணீரை தந்திரமாக பாவிக்கின்றனர். இலங்கை அரசியலில் மகாவலி கங்கை, இரணைமடு குளம் என்பன அரசியல் வியூகங்களாக மாறியுள்ளது. நிலத்தடி சுன்னாம்பு தண்ணீரை நம்பி வாழ்ந்த யாழ் குடா நாடு, வெகு விரைவில் பெரும் தண்ணீர்ப்பஞ்சத்தை மேற்கொள்ளவிருக்கின்றது. நிலத்தடி நீரிலே கழிவுப்பொருட்கள் அதிகமாக கலப்பதும், அளவுக்கதி கமாக நிலத்தடி நீரை
உறிஞ்சித்தள்ளும் குழாய்க்கிணறுகளும் இதற்கு காரனம், பேசாலை போன்ற மணல் தரை கொண்ட இடங்களும், இந்த நிலத்தடி நீரிலே கழிவுகள் சேறும் அபாயம் உள்ளது, வீட்டுக்கு வீடு குழிக்கழிவறைகள் அதுவும் இன்னொரு வளவுக்கும் கிணறுகளுக்கும் மிக மிக அருகா மையில் கழிவறைக்குழிகள் அமைவது தண்ணீர் மாசுபடுவதை துரிதமாக்குகின்றது. மிக மிக நெருக்கமாக மக்கள் தமது வீடுகளை அமைப்ப தும், கிராம, நகர சபை நிருவாங்கம் இதில் போதியளவு சிரத்தை காட்டவேண்டிய அவசி யம் உண்டு. இவர்களின் அசமந்த போக்கினால், நாடுமுழுவதும் தண் ணீர் மாசுபடும் அபாயத்தை எதிர் கொள்கின்றது, இதனை நல்லதோர் சந்தர்ப்பமாக உபயோகித்து Suez என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவணம் தனது மூக்கை நுழைக்கப்பார்க்கின்றது.


                                                                                       இந்த suez என்ற நிறுவணம் ஒரு நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் என்னென்ன விபரிதம் நடக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம். முதலில் இந்த நிறுவணம், ஒரு நாட் டில் உள்ள தண்ணீர் பாவனையில் தனது நிர்வாகத்தை நுழைக்கும், ஆறுகளை முதலில் ஏதோ திட்டத்தை முன்வைத்து தனது கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரும், பின்னர் அந்த ஆற்றில் குளிப்பதை, அந்த ஆறு நீரை விவசாயத்துக்கு பயண்படுத்துவதில் கட்டணங்களை கொண்டுவ ரும், நிலத்தின் கீழ் உள்ள நீரை, சுத்தமாக்குகின்றொம் என்ற பாவனை யில், நிலத்தடி நீரின் மிதும் தமது உரிமையை நிலநாட்டுவார்கள், பின் னர் என்ன,  கிணறுகள், குழாய்க்கிணறுகள் எதையும் யாரும் அவர்கள் அனுமதி இன்றி தோண்ட முடியாது. உங்கள் வீடுகளுக்கு அவர்கள் வேண்டியளவு தண்ணீர் கட்டணத்தோடு தருவார்கள், இந்தியாவில் கோவை மாவட்டத்தில் இந்த தண்ணீர் முகாமைத்துவ பொறுப்பை இந்த Suez என்ற நிறுவணம் வாங்கியுள்ளது, இனி என்ன நடக்கும் என்பதை கீழே நான் தரும் காணொளி விபரமாகவிளக்கும், அன்புடன் பேசாலைதாஸ்
                                             

Sunday, January 6, 2019

மரம் வளர்ப்போம் மண் காப்போம்!

மரம் வளர்ப்போம் மண் காப்போம்!  பேசாலைதாஸ்

                   1964 ஆண்டு பெரு வெள்ளம் இலங்கை முழுவதையும் தாக்கியது, குறிப்பாக பேசாலை கிராமம் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கியது, பேசாலையில் தென்கடலும், வடகடலும் கைகுலு க்கிக்கொண்டதாக ஒரு செய்தி, இந்த வெள்ளப் பெருக்கையொட்டி பல தொற்று நோய்கள் பர வின, அதில் கண்வருத்தம் முக்கியமானது, நான் ஆறுவயது சிறுவனாக இருந்த போது, நானும் கண் ந்ய்யாலும், சிரங்குப்புண்ணினாலும் பாதி க்கப்பட்டேன், பிரண்டை, சோற்று கற்றாளை இவைகளே அப்போது மருந்தாக பாவிக்கப்பட்டது, எனது அம்மா சோற்று கற்றாளையின் கழியை எனது கண்களில் கட்டிய ஞாபகம்! 

                                           கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை
மருத்துவ குணங்களுக்கென்று பய ன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச் சாறுகளில் ஆந்த்ரோகுயினோ ன்கள், இரெசின்கள், பாலிசக் கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள் ளன. கற்றாழையிலிருந்து வடிக்க ப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர் பச்சை, இளம்பச்சை கரும்பச்சை யெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.

                                             இப்போது வியாபாரப்பொருளாக இந்த கற்றாளை சாகுபடி செய்யப்படுகின்றது, கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை: குர்குவா கற்றாழை (அலோ பார்ப டென்ஸ் (Aloe vera)) கேப் கற்றாழை( அலோ பெராக்ஸ் (Aloe ferox))) சாகோ ட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி (Aloe perryi)) இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவார ணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைக ளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக உள்ளன. இவ்வளவு மருத் துவ குணம் கொண்ட கற்றாளை எங்கள் ஊரில், எங்கள் சொத்தாக நாங்கள் பாவித்த இந்த இயற்கையான கற்றாளையை இப்போது தொட்டாலே அரச குற்றமாம்!

                                                              முகநூலிலே தமயந்தி என்ற சமூக ஆர்வலர் எழுதிய சீற்றமான பதிவை உங்களுக்காக மீண்டும் பதிவு செய்கின் றேன். 

"இப்போ கற்றாழையின் மரபுரிமை எந்த நாட்டுக்குச் சொந்தம்?" 

                                                      காணுமிடமெல்லாம், கால் வைக்க முடியாதபடி கற்றாழை (பிள்ளைக்கற்றாழை) எங்கள் நிலமெல்லாம் வியாபித்துக் கிடந்த ஒரு காலம் இருந்தது.  அன்றைய நாட்களில் எமது கிராமத்தில் கால்ப்பந்து விளையாடிவிட்டு எல்லோரும் அப்படியே பந்தடி மைதான த்து ஓரங்களில் ஆளுக்கொரு கற்றாழை மரத்தைப் பெயர்த்தெடுத்தபடி அமர்ந்து கொண்டு விடுவோம் கால் நோவுக்குப் போட்டு உழக்க. யார் அதிகம் தின்பதென்று கற்றாழைச் சோற்றை அப்படியே தண்டோடு சப்பி விழுங்குவோம். 

                                                                     எங்கள் தேசத்தின் மிகப்பெரும் இயற்கை மருத்துவ மூலிகை. வேப்ப மரத்தைப்போல் கற்றாழையும் அரிய பொக்கி ஷம். இப்போ, மிகப்பெரும் பணப்பயிராகி விட்டது கற்றாழை. அரசாங்க
 அனுமதி பெற்று, நிலத்தைச் செப்பனிட்டு பயிரிடுதலே செய்கிறார்கள். 
வெளிநாட்டுக்கு ஏற்றப் படுகிறது.  (மருத்துவத் தேவைகளுக்கும், ஷம்போ, முகக்க்கிறீம், பொடிகிறீம் வகையறாக்கள் தயாரிக்கவும்.)
கடந்த ஆண்டு தீவகத்தில் பெருமெடுப்பில் இந்தப் பயிர்ச்செய்கையை விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் அனுசர ணையுடன் தொடங்கி வைத்தார்கள். .  1கிலோ 150ரூபாய்க்கு சந்தைப் படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.

                                                                              இப்போ தகுந்த அனுமதியில்லாமல் ஒரு பயல் கற்றாழையைத் தொட முடியாது.  அண்மையில் செய்தியொ ன்று:- இயற்கையாகவே காட்டுக்குள் நின்ற கற்றாழையைப் பறித்த பொது மக்களை அதிகாரிகள் எச்சரித்துக் கலைத்தார்களாம்.

கற்றாழையை ஏற்றுமதி செய்வது ஒருபுறம் இருக்கட்டும்...., இப்போ
 கற்றாழையின் மரபுரிமை எந்த நாட்டுக்குச் சொந்தமாக இருக் கிறதென்று யாராவது அறிந்து வெளியிட முடியுமா? அல்லது அதையும் வெளிநாடுகளுக்கு விற்று விட்டதா அரசாங்கம்.

பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் அம்ரிதா ஏயெம் போன்ற சமூக, இயற்கைவள அக்கறையுள்ளவர்கள் இவை பற்றிய தகவல்களைத் தேடியெடுத்து மக்களுக்குத் தர வேண்டுமென வேண்டிக் கொள்கி ன்றேன்.

                                                  பிரதானமான பிற்குறிப்பு;- கற்றாழை, நாகதாளி (சப்பாத்திக்கள்ளி) குமரிகற்றாழை போன்ற தாவரங்களும் மரங்களும் வரண்ட பிரதேசங்களிலும் செழிப்பாக வளரக் கூடிய, எல்லாக் காலங் களிலும் பசுமையாகவே காணப்படுபவையாகும். அவை அழிந்து போன தற்கான முக்கிய காரணம் இந்தியப் படைகள் விதைத்துப்போன சீமைக் கருவேலமரம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். அந்த விஷமரங்களை அழிக்க அரசு இன்றுவரை எந்த நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வில்லை என்பதுதான் உண்மை)    நன்றி தமயந்திக்கு  

  மரங்கள், காடுகள், சுற்றுப்புற சூழல்கள் இவைகள் மீது நாம் விழிப்பு ணர்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக இவ்வகையான பதிவுகளை வலைப்பின்னல்கள் உதவியுடன் ஒரு செய்தியாக உங்கள் பார்வைக்கு விடுகின்றோம், மிகுதி உங்கள் எண்ணங்களில், அன்புடன் பேசாலைதாஸ்    

மரம் வளர்ப்போம் மன்னாரை காப்போம்!

மரம் வளர்ப்போம் மன்னாரை காப்போம்!    பேசாலைதாஸ்

                                                                        சென்றதடவை பேசாலை காட்டில் உடை மரங்கள், உயில் மரங்கள் தனியார் வியாபார நோக்கத்திற்காக  பெருவா ரியாக வெட்டப்பட்டு, பேசாலை காடுகள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதை பதிவு செய்து, அதனை தடுக்க பேசாலையில் உள்ள கிராம சபை மற்றும் சமய நிறுவனங்கள், கழகங்கள் உடனடியாக தகுந்த நட வடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை பதிவு செய்திருந்தேன் .   பேசாலையில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்று, தனது உற்பத்தி நடவ டிக்கைக்காக நாள்தோறும் ட்ரெக்டர்கனக்காக மரங்களை வெட்டி
குவிக்கின்றனர். படத்தில் உள்ளது ஒரு நாளுக்கு பேசாலைக்காட்டில் வெட்டப்படும் மரங்களை நீங்கள் படத்தில் காணலாம். பேசாலைக் காடு ஏறக்குறைய 8 சதுரமைல் பரப்பளவை கொண்டது, இதில் நாள்தோறும் இந்தளவு மரங்கள் வெட்டப்படுவது அதிர்ச்சியான விடயம் ஆனால் பேசாலை கிரம வாசிகள் இதுபற்றி சிந்தித்தார் களா? என்பது கேள்விக்குரியதே!



                                         இப்போது மன்னார் மாவட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் அடுத்த பதிவு, மீண்டும் மரங்களைப்பற்றியதே! எமது மன்னார் மாவட்டத்தில் முள்முருங்கை மரத்திற்கு என்ன நடந்தது என்பது பெரும் மர்மமாகவே இருக்கின்றது, பல்வகை பயண்பாட்டுக்கு உகந்த மரம் தற்போது இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. மரங்களை செடிகள் முற்றாக அழிந்துபோகாமல் இருக்க, விதை வங்கிகள் என்ற அமைப்பு ஒவ்வொரு நாடுகளிலும் உண்டு அப்படிப்பட்ட அமைப்பு இலங்கையில் உள்ளதா? என்பது எனது சிற்றறிவுக்கு இன்னமும் தென்பட வில்லை. எதிர்பாராத இயற்கை அழிவு காரணமாக ஒரு தாவர இனம் அழிந்தால், அந்தத் தாவரத்தினை எப்படி மீள உருவாக்குவது என்பது பெரிய கேள்விக்குறி. உலகின் மிகப்பழைய மரங்களில் ஒன்றாகக் கூற ப்படும் மன்னாரின் பெருக்க மரம் இலங்கையில் வேறெங்கும் உள்ளதா என நான் அறியேன். நான் சென்ற இடங்களில் அதைக் கண்டதும் இல்லை.

                                               அவ்வாறு இல்லாதுவிடின், இந்த மரம் இறந்தால், பெருக்கமரம் எப்படித் தோற்றமளிக்கும் எனப் புத்தகங்களில்தான் (அல்லது வீடியோவில்) அடுத்த தலைமுறை படிக்கவேண்டியிருக்கும்.
மன்னாரில் சுற்றுலாப் பயணி யரை ஈர்க்கும் பெருக்கமரம் அரேபிய ர்களால் தங்களது குதிரைகள், ஒட்டகங்களுக்குத் தீனியாகக் கொண்டு வரப்பட்டது எனக் கூறப்படுகிறது. "வந்தேறுகுடி" என்றாலும் எம் மண் ணோடு இணைந்து பல நூறாண்டு வாழும் இந்த மரம் வேறெங்கும் இல்லாவிடில், முற்றிலும் அழிவ தற்கான சாத்தியங்கள் உள்ளன.



                                                                   பெருக்கமரம் இதனை Biobab Tree என்றும் அழைப்பர்கள், ஆபிரிக்கா மடகஸ்கார் காடுகளில் காணப்பட்ட இந்த மரங்கள் கி.பி 1470 ஆண்டளவில் மன்னார் மாவடத்தில் அரேபிய வியா பாரிகளினால் பயிடப்பட்டது, தமது ஒட்டகங்களுக்கும், குதிரைகளுக்கும் தீவனமாக இதன் விதைகள் இலைகள் பாவிக்கப்பட்டதினால் தமது தேவைக்காக அரேபிய வியாபாரிகள் இதனை இங்கே விதைத்தனர். தலைமன்னார், ஓலைத்தொடுவாய் வடக்கு, விறானாவுக்கு அருகாமை யில் காணப்பட்ட இந்த பெருக்க மரம் முற்றாக அழிந்துவிட்டன. பெருக்க மரம் இதனை Biobab Tree என்றும் அழைப்பர்கள், ஆபிரிக்கா மடகஸ்கார் காடுகளில் காணப்பட்ட இந்த மரங்கள் கி.பி 1470 ஆண்டளவில் மன்னார் மாவடத்தில் அரேபிய வியாபாரிகளினால் பயிடப்பட்டது, தமது ஒட்ட கங்களுக்கும், குதிரைகளுக்கும் தீவனமாக இதன் விதைகள் இலைகள் பாவிக்கப்பட்டதினால் தமது தேவைக்காக அரேபிய வியாபாரிகள் இதனை இங்கே விதைத்தனர். தலைமன்னார், ஓலைத்தொடுவாய் வடக்கு, விறானாவுக்கு அருகாமையில் காணப்பட்ட இந்த பெருக்க மரம் முற்றாக அழிந்துவிட்டன.



                                                        இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க உலகின் பல நாடுகளில் விதை வங்கிகள் உள்ளன. அந்தந்த நாடுகளின் அரிய விதைகளும், ஒவ்வொரு தாவரத்தினதும் வெவ்வேறு வகை விதைகளும் அங்கு பேணப்படுகின்றன. இவ்வாறான வங்கிகளின் "தலைமையகம்" என்று கூறக்கூடிய ஓரிடம் நோர்வேயில் உள்ளது. நாலரைக் கோடி குறோணர்கள் செலவில் மிகப் பாதுகாப்பான் முறையிற் கட்டப்பட்டுப் பேணப்படும் இந்த "வங்கியில்" உள்ளவை மிகப் பெரும்பாலும் உணவுத் தாவரங்களின் விதைகளே! ஆயினும் ஏனைய தாவரங்களை, அரிய வகை மரங்களை இவ்வகையிற் பேணமுடியும்.

                                                                        இவ்வாறான ஓரமைப்பை இலங்கையில் (இதுவரை இல்லாவிடின்) உண்டாக்குவது மிக அவசியம். முள்முருங்கை எவ்வாறு அழிந்தது என்று பலர் அறியவில்லை. ஆனால் வட இலங்கை யில் முன்பிருந்தளவு இந்த மரங்களை யாரும் காணமுடியாது. விதை வங்கி இருந்திருப்பின் கொஞ்சமாவது இந்த மரத்தைக் காப்பாற்றியிரு க்க முடியும். எல்லா மாவட்டங்களிலும் விதைவங்கி தேவை. துறைசார் வல்லுநர்கள் இதுபற்றிக் கவனத்தில் கொள்ளல் அவசியம். விவசாயத் திணைக்களமோ, பல்கலைக்கழக விவசாய பீடங்களோ இவற்றை இலகுவாக நிர்வகிக்க முடியும். அவ்வகையில் எமது தாவர இனங்கள் அத்தனையும் அடுத்த தலைமுறையின் கையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

                                         மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்கமரத்தின் விதைகள் பேணப்பட்டு அடுத்த தலைமுறைகளுக்கும் இதனை எடுத்து செல்லவேண்டும் . இது தொடர்பாக மன்னார் பிரதேசசபை உரிய கவன ஈர்ப்பை அரசாங்கதிற்கு எடுத்துச்செல்லும் கடமை பட்டவர்கள். எனது இந்த பதிவுக்கு இளைவாலை விஜயேந்தரின் முகநூல் பதிவுக்கு நன்றி

அன்புடன் பேசாலைதாஸ்

Saturday, January 5, 2019

கொல்லும் கொடூர, சிங்கத்தின் வாரிசுகள், இந்த சிங்களவர்கள்!

கொல்லும் கொடூர, சிங்கத்தின் வாரிசுகள், இந்த சிங்களவர்கள்!    பேசாலைதாஸ்

                                                               இலங்கை சிங்கள இனத்தவரின் தெய்வீக இதிகாசமாக விளங்கும் மகாவம்சத்தின் குறிப்பின் படி சிங்கள இனத்த வர்கள் நேரடியாகவே ஒரு ஆண் சிங்கத்தின் வழியாக பிறந்தவர்கள் என்றே குறிப்பிடப்படபட்டுள்ளது. அறிவியல் அடிப்படையில், ஒரு மனித இனத்தின் மரபணுவும், ஒரு மிருகத்தின் மரபணுவும் இணைந்து, ஒரு உயிர் பிறப்பெடுக்கும் என்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விட யமே, தற்கால அறிவியலின் அபாரா முயற்ச்சியனால், மிருகங்களின் விந்தணுக்களில் இருந்து வெவ்வேறு உருவ மிருகங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.

                                                               இயற்கையாகவே இந்த மரபணு கலப்பு
ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு ஆம் என்றே விஞ்ஞானிகள்பதில் அளித் துள்ளனர். சில தாவரங்கள், ஒருகல உயிரினம் உதாரணம் பக்றீரியா (single-celled organisms,) இவைகளுக்கிடையில் இது நடக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றார்கள், இதனை asexual reproduction என்று கூறுகின்றர்கள் In nature, some plants and single-celled organisms, such as bacteria, produce genetically identical offspring through a process called asexual reproduction. In asexual reproduction, a new individual is generated from a copy of a single cell from the parent organism.

                                                                      முதன் முதலாக வெள்ளாட்டு இனத்தின், இரு வெவ்வேறு ஆட்டினத்தின் மூலக்கூறுகளில் இருந்து Dolly என்ற
ஒருவகை ஆடு குளோனிங் முறை மூலம் 1979 ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்காலத் தில் உற்பத்தியை துரிதப்படுத்த இந்த வகை யான மரபணு கலப் புகள் மிருகங்களுக் கிடையில் உருவாக்கப்படுள் ளன. கடந்த ஐம்பது வருடங்களாக பலவகையான cloning experiments நடந்துள்ளன. மனிதர்களுக்கிடை யில் இந்த குளோனிங் முறை நடந்துள் ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது! அதுபற்றிய கட்டுக்கதைகள் எழுந்துள்ளபோதும் இன்ன மும் அது பற்றி அதிகாரபூர்வமக அறிவிக்க ப்படவில்லை. 1998 தென் கொரியா வில் மனித குளோனிங் முயற்சி மேற்கொள்ள ப்பட்டதாகவும் அது தோல்வியில் முடிந்துள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ கண்ணோட் டத்தில் மனித வர்க்கம் மிக மிக சிறப்பான மரபணூவினால் அதுவும் ஒரே ஒரு மரபணுவினால் சகல மனிதர்களும் படைக்கப்பட்டதினால், மனித மரபணுவில் இருந்து ஏனைய உயிர்கள் பிறப்பிக்கமுடியாது என வாதிடுகின்றனர்.


                                             நிலமை இப்படி இருக்க, எப்படி இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மட்டும், தாங்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று உரிமை கொண்டாட முடியும்? மகவம்சம் இப்படி இவர்களை மூளைச்சலவை செய்துள்ளது! தாங்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்ற இந்த மகாவம்ச சிந்தனையே இவர்களை இனவெறியர்களாக அடையாளப்படுத்து கின்றது!

                                                          மகாவம்ச கதையின்படி கிறிஸ்தவத்தின் முன் பதினாறாம் நூற்றாண்டில் , இந்தியாவின் வங்க தேசம் என்ற‌ இராச்சிய

த்தில் மன்னவன் ஒருவனு க்கு அழகான ஒரு அரசகு மாரி இருந்ததாகவும், ஒரு முறை இந்த அரசகுமாரி தேரிலே காட்டுவழியாக, பயணித்தவேளை சிங்கம் ஒன்று அந்த தேரை தாக்கி அரசகுமாரியை கவர்ந்து சென்றதாம். பின்னர் அவள் சிங்கத்தோடு குகையில் வசித்ததாக மகாவம்சம் விபரி  க்கி ன்றது, சிங்கத்திற்கும் அரசகுமாரிக்கும் இரு பிள்ளைகள் பிறந்தா  ர்கள் ஆண் பிள்ளை சிங்கபாகு என்றும், பெண் பிள்ளை சிங்கவாலி எனவும் அழைக்கப்பட்டனர்.

                                                                சிங்கபாகுவுக்கு பதினாறு வயது நடக்கும் போது, அவன் தன் தாயையும், தன் சகோதரியையும் அழைத்துக் கொண்டு, சிங்கத்திற்கு தெரியாமல் காட்டை விட்டு, வங்க தேசத்திற்கு சென்றுவிட்டான். இதை அறிந்த சிங்கம் கடுங்கோபம் கொண்டு, வங்க தேச மக்களை கொன்று குவித்தது, எனவே தனது சிங்கத்தந்தையை சிங்கபாகு கொலை செய்து நாட்டை காப்பாற்றினான். பின்னர் சிங்கபுர என்ற நகரை உருவாக்கி தனது சொந்த சகோதரியை மணமுடித்தான் இவர்களுக்கு முதல் மகனாக பிறந்தவனே வியஜபாகு!

                                                                 இந்த விஜயபாகும் அவனது தோழர்களும் துர்ந‌டத்தைகளிலும், துன்மார்க்கதிலும் ஈடுபட்டதால்,, சிங்கபாகு அவ னையும் அவது எழுநூறு தோழர்களையும் கப்பலில் ஏற்றி, கடலில் அனு ப்பிவிட்டான், விஜயபாகு தன் தோழர்களுடன் இலங்கையில் இருந்த தம்பண்ணை என்ற இடத்தை வந்தடைந்தான், பின்னர் இலங்கயின் பூர்வீக குடிகளாக இருந்த இயக்கர் ,நாகர் என்ற இனத்தின், நாகர் இன த்தை சார்ந்த குவேணியை மணமுடித்தான். இந்த குவேனி நாகர் இனத் தின் அரசியாக இருந்தபடியால், வியபாகுவினால் இலகுவாக, இலங்கை முழுவதற்கும் அரசனாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவனே இலங்கையின் முதலாவது மன்னனாகினான். இவனது வழியாக வந்தவர்கள் தான் இந்த சிங்கள மக்கள்!

                                                                             மகாவம்சத்தில் வர்ணிக்கப்பட்ட இந்த சிங்கக்கதையை உண்மையென நம்பி, சிங்கள இனம், இலங்கையை
ஆளும் இனம் என்ற மயக்கத்தை மகாவம்சத் தின் தவறான கட்டுக்கதை வழியாக, புத்தரின் கோட்பாடுகளை புறந்தள்ளியபடியே  இனவா தத்தை முன் நிறுத்தி இந்த சிங்கள அர‌சியல் நடத்துகின்றனர். இவர்களின் நடவடிக்கையை பின் பற்றாமல் புத்தரின் வழி சிங்கள மக்கள் வாழ்ந் தால், ஒரு அமைதியான அன்பான சமூக மாக சிங்கள மக்கள் வாழ்வதன் மூலமாக ஒற் றுமை அமைதி வளர்ச்சி எல்லாமே இலங்கைக்கு கிடைக்கும். அன்புடன் பேசாலைதாஸ்