Monday, April 16, 2018

மன்னாரில் வீதி விபத்துக்கள் களவுகள் போன்றவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரiஐகள் குழு வேண்டுகோள்.

மன்னாரில் வீதி விபத்துக்கள் களவுகள் போன்றவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரiஐகள் குழு வேண்டுகோள்.
(செய்தியாளர்) 09.04.2018
மன்னார் பகுதியில் வீதி விபத்துக்களும் களவுகளுமே அதிகமாகக் காணப்படுவதால் இவைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளம்படி மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸிடம் வேண்டிக்கொண்டனர்.
நடப்பாண்டு புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக் கிழமை மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸை மரியாதையின் நிமித்தம் அவரின் அலுவலகத்தில் சந்தித்தது.
அவ்வேளையில் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தை நோக்கும்போது இங்கு அதிகமாக களவும், விபத்துக்களுமே அதிகமாக காணப்படுகின்றன.
விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதற்கான காரணம் வாகன ஓட்டிகளுக்கு சரியான சட்டத்திட்டங்கள் பயிற்சிகள் இல்லாமை பெரும்பாலும் தெரிய வருகின்றது.
இதற்கு ஒரு காரணமும் இருப்பதாக தெரியவருகிறது. அதாவது வாகன ஓட்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் வாகன பரிசோதகர் ஒருவர் முன்னிலையில் மட்டும் வழங்கப்படுவதால் இங்கு தகுதியற்றவர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு முறைகேடான முறையில் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
ஆகவே எதிர்காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்து பரிசோதகர் திணைக்களம், பிரதேச செயலக அதிகாரி, பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிசார் கொண்ட ஒன்றினைந்த குழுவின் முன்னிலையில் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாகில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் சரியான வீதி போக்குவரத்து சட்டத்திட்டங்களை கற்றுக் கொண்டு தங்கள் அனுமதிப் பத்திரங்களை பெறும் நிலை தோன்றலாம் என தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அடுத்து மன்னார் பகுதியில் எந்த முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்தப்படாததினதால் அவர்கள் தாங்கள் விரும்பிய கட்டணங்களை பிரயாணிகளிடம் அறவிடுவதாகவும் புகார்கள் கிடைப்பதனால் ஒவ்வொரு முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச் குழு பொலிஸ் அத்தியட்சகரிடம் வேண்டுகோள் விடுத்தது.
அடுத்து இரவில் பொலிசார் வீதிகளில் சைன் அங்கி இல்லாமல் இருளில் இருந்து பரிசோதனை செய்வதால் பலர் பல அளெசரியங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே இது விடயமாக கவனம் செலுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நகர் புறங்களில் குறிப்பாக நகர சபை எல்லைக்குள் மக்கள் செறிந்து நிற்கும் இடங்களில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்லுவதாலும் பல விபத்துக்கள் இடம்பெறுவதையும் இவ் குழுவினர் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறன இடங்களில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொள்ளும்படி வேண்டப்பட்டது.
இவற்றை செவிமடுத்த மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸ் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவிக்கையில் பிரiஐகள் குழுவுக்கும் பொலிசாருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டிய அவசியத்தை தெரிவித்தார்.
ஏனென்றால் பொலிசாரும் பிரiஐகள் குழுவும் பொது மக்களுக்காகவே தங்கள் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்ததுடன் பொது மக்களுக்கு பொலிசாரால் எதாவது விழப்புணர்வு ஏற்படுத்தும்போது பிரiஐகள் குழுவும் தங்களுக்கு ஆதரவை வழங்கும்படியும்
அத்துடன் தாங்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் எடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment