Monday, December 11, 2017

பின்லாந்தின் அதி சிறந்த கல்வி முறையும் இலங்கை கல்வி முறையும்!

பின்லாந்தின் அதி சிறந்த கல்வி முறையும் இலங்கை கல்வி முறையும்!


அன்பர்களே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் இலங்கை கல்வி முறையில் மாற்றம் உட்பு குத்தப்படவுள்ளதாக அன்மை யில் ஊடகங்களுக்கு தெரிவி த்துள்ளார்.   கல்விப் பொதுத்த ராதர சாதாரண தர பரீட்சை யில் இனிவரும் காலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் குறைத்து, தகவல் தொழி ல்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டில் உலகின் வெற்றிகரமான கல்வி முறை காணப்படுவதாகவும், நடை முறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்குநடைமுறைப்ப டுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.பின்லாந்து நாட்டை ப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டி ன் மாணவர்களதுஎதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்ப டுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

                                           ஸ்கண்டினேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து என்பன கல்வி முறையில் ஒரே மாதிரியையே பின்பற்றுகின்றன அதிலும் பின்லாந்து கல்வி முறை முதன்மை வகிக்கின்றது. எனவே பின்லாந்தின் கல்வி முறையில் உள்ள சில சிறப்பு அம்சங்களை இங்கு உற்றுநோக்குவது நல்லது. பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது...இலங்கை இந்தியாவில் உள்ளதுபோல ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை... கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசர மும் அவர்களுக்கு இல்லை... பிள்ளைகள் கற்கை திறனை தாமாகவே கண்டுணர்ந்து கல்வி கற்கவேண்டும் என்பது பின்லாந்து கல்வியாளர்களின் கொள்கை..எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்ன ஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இரு ந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வ தும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...அதாவது இயற்கையை உற்றுனோ க்குவதாலும் அதனை புரிந்து கொள்வதாலும், வினாக்களும் விந்தைகளையும் புதிர்களையும் உணர்ந்து அதனை வெற்றி கொள்ளும் ஆரம்ப வினைதிறனை குழந்தைகள் பெற்றுக்கொ ள்கின்றன.ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழ ந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை..ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்க ப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு... ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...தங்கள் பி ள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...ஆகமொத்தத்தில் திறந்த சுதந்தர சுற்றாடலில் பிள்ளைகள் கற்றல் திறனை பெற்றுக்கோள்ளும் வாய்ப்புகள் வழக்கப்படுகின்றன. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படு வது இல்லை...மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்வி க்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலா சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...மே
லும் அதிக தகவலுடன் உங்கள் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment