Thursday, May 5, 2016

மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பணிபகிஷ;கரிப்பு கைவிடப்பட்டது


மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பணிபகிஷ;கரிப்பு கைவிடப்பட்டது

(பிராந்திய செய்தியாளர்) 05.05.2016
இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கான மன்னார் ஊழியர்களின் நலன் கருதி வவுனியாவில் இயங்கிவரும் மன்னார் சாலை கணக்காளர் காரி யாலயத்தை வவுனியாவிலிருந்து மன்னாருக்கு மாற்றும்படி இலங்கை போக்குவரத்து சபை வடக்கு இணைந்த மன்னார் தொழிற்சங்கம் முன் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (05.05.2016) பணிபகிஷ;கரிப்பில்ஈடுபட்ட மன்னார் சாலை ஊழியர்கள் பகிஷ;கரிப்பை கைவிட்டு தங்கள் கடமைகளுக்கு திரும்பினர்.
மன்னார் இலங்கை போக்குவரத்து சபையில் கடமைபுரியும் ஊழியர்க ளின் நலன்கருதி மன்னாரில் இயங்க வேண்டிய மன்னார் இ.போ.ச. சாலை கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருவதால் இப்பகுதி ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவற்றை மன்னாருக்கு மாற்றும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாவருக்கும் மன்னார் சாலை தொழிற்சங்கம் தெரிவித்திருந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தமையால் வியாழக்கிழமை (05.05.2016) மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் தங்கள் பணிபகிஷ;கரிப்பை மேற்கொண்டனர்.
பணிபகிஷ;கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள இ.போ.ச.சாலைக்கு முன்பாக பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தொங்கவிட்டு ஒன்று கூடியிருந்தனர்.
கணக்காளரின் அடாவடி நிறுத்தப்பட வேண்டும், தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், கணக்காளர் ஒருவரின் நலனுக்காக 220 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதா? வவுனியாவில் இயங்கும் மன்னாருக்குரிய கணக்காளர் காரியாலயம் உடன் மன்னாருக்கு மாற்றப்பட வேண்டும், கணக்காளரே ஊழியர்களை அச்சுறுத்தாதே என்ற வாசகங்கள் இவர்கள் இருந்த இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் அன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கான எந்தவித உள்ளூர் வெளியூர் போக்குவரத்து சேவைகளும் அதிகாலை முதல் நண்பகல் வரை நடைபெறவில்லை.
காலையில் இ.போ.ச.போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததால் மாணவர்கள் உட்பட பல பிரயாணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியதால் வடமாகாண சபை உறுப்பினர் ரிவ்ஹான் பதியூதின் மன்னார் சாலைக்கு நேரடியாக சமூகமளித்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதுடன் சம்பந்தப்பட்ட மேல்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவாத்தை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் உபாலி கிரிபத்கொட மற்றும் வடமாகாண இ.போ.ச.சாலை செயல்பாட்டு முகாமையாளர் கே.கேதீஸ்வரன் மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து நிலைமை சுமூக நிலைக்கு திரும்பியது
அதாவது மன்னாருக்கான கணக்காளர் அலுவலகம் எதிர்வரும் திங்கள் கிழமை (09.05.2016) மன்னாரில் இயங்கும் எனவும், மன்னார் கணக்காளராக இயங்கிவருபவரை உடன் மாற்றி புதியவரை நியமிப்பதாகவும் பணிபகிஷ;கரிப்பில் ஈடுபட்டவர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ் பணிபகிஷ;கரிப்பு முற்றுப்பெற்று நண்பகல் ஒரு மணிக்கு மன்னார் சாலை இ.போ.ச.சாலை போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
(படம்)
மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை (05.05.2016) பணிபகிஷ;கரிப்பை மேற்கொள்வதையும்
மன்னார் இ.போ.சபை போக்குவரத்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதையும்
இதனால் தனியார் பஸ் நிலையம் பிரயானிகளால் களைக்கட்டி இருப்பதையும் படங்களில் காணலாம்


Tuesday, May 3, 2016

மன்னார் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களும் போதைவஸ்து கடத்தல்களும் ஒரு பார்வை!

மன்னார் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களும்  போதைவஸ்து கடத்தல்களும் ஒரு பார்வை!  

மன்னார் மாவட்டத்தில் அன்மைக்காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றது. நாடளவில் இக்குற்றச்செய ல்கள் அதிகரித்துள்ளது. போருக்கு பின்னர் ஒரு நாடு ஒரு சமூகம் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால் மன்னார் மாவட்டத்தில் இந்த பிரச்சனை அதிகரிப்பத ற்கு என்ன காரனம் என்பதை ஆய்வு செய்து அதைதடுப்பதற் கான வழிகள் என்ன என்பதை கண்டறிவது சமூக ஆர்வலர்கள் புத்தி ஜீவிகளின் கடமையாகும். இந்த விடயத்தில் சமய தலைவ ர்கள்  ஆசிரிய சமூகம் கூடுதல் அக்கறை கொள்ளவேண்டியு ள்ளது. போருக்கு முன்னைய காலங்களில் கிராமங்கள், சமூகக ங்கள் தனித்துவம் கொண்டு இருந்தபடியால் பாலியல் குற்றச்செ யல்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை, போருக்குப்பின் அரச படைகள் ,இடம்பெயர்ந்து வந்தவர்கள், வறுமை, விதைவ கள் அதிகரிப்பு, இளவயது ஆண்கள் போரில் இறந்தது போக  எஞ் சியவர்களில்வெளி நாடுகளுக்கு கனிசமான அளவு புலம்பெயர் ந்து சென்றமை இதுபோன்ற பல, காரணிகள் இந்த விடயத்தில்
செல்வாக்கு செலுத்துகின்றன. இருந்த போதும் பாலியல் குற்ற செயல்கள் அதிகரிப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண் டும். பாலியல் குற்றவாளிகள் உருவாகுவதற்கு போதை வஸ்து பாவனையும், போதைவஸ்து கடத்துவதும் பெரும் பங்கு வகிக்கி ன்றது. தலைமன்னார் வழியாக போதை வஸ்து கடத்தப் படுவது சர்வதேச ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.இதற்கு உள்ளூர் வத்தகர்கள் மறைமுகமாக உதவி செய்து, பெரும் செல்வந்தர் கள் ஆகியுள்ளார்கள். இப்படி பணத்தை தேடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து ஓரம் கட்டப்படவேண்டும். இதற்கு சமூக விழிப்புணர்வு எமது இளை ஞர் மத்தியில் உருவாகவேண்டும். அப்படி துணிச்சலாக முன் வரும் இளைஞர்களை சமூகம் வரவேற்று அவர்களுக்கு ஊக்க மும் உற்சாகமும் அளிக்கவேண்டும். போதைவஸ்து எமது மன்னார் வழியாக கடத்தப்படுவதை உடனடியாக நிறுத்தவேண் டும். போதை வஸ்து எமது சமூகத்தை சீரழிக்கும்.பாலியல் குற் றம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு மன்னார் மாவட்ட புலம் பெயர்ந்து  வாழும் மக்களும் உதவி செய்யவேண்டும். இது தொடர்பாக எமது இணையத்தளம் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாரக உள்ளது. நன்றி
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் நோர்வே

Saturday, April 16, 2016

நல்வரவாகுக!


நல்வரவாகுக!

                                     அன்பின் மன்னார் உடன் பிறப்புகளே!  எமது மன்னார் மாவட்டம் இன்னும் பின் தங்கிய‌ மாவட்டமாகவே  தென்படுகின்றது. அபிவிருத்திக்கு என்று மன்னார் மாவட்டத் திற்கு ஒதுக்கப்படும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றது. ஒரு சில அபிவிருத்தி திட்டங்கள் அப்படியே முடக்கப்பட்டுள்ளது.
மன்னாரை நேசிக்கும் அரசியல்வாதி இருப்பதாக  தெரியவி ல்லை. தமிழ் அரசியல்வாதிகள் கூட தங்கள் கட்சி நலனையே கருத்தில் கொள்கின்றார்கள். அரசாங்க அதிகாரிகள் வேற்று மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதினால் மன்னார் அபிவி ருத்தி மீது அக்கறை இவர்களுக்கு இல்லை. எதிலும் அசமந்தம்  ஊழல்கள் மலிந்து கிடக்கின்றது. இவைகளை மக்களுக்கு வெளி ச்சம் போட்டு காட்டுவதுக்கு துணிச்சலான மன்னார் மைந்தர் களின் உதவி தேவை! உங்கள் சுய விபரங்கள் பாதுகாப்பாக பேணப் படும். உங்கள் சுய தரவுகளை நாம் ஐ. நா மனித உரிமை கள் ஆணையத்தில் பத்திரமாக பேணப்படும் என்பதில் உத்தரவாதம் தருகின்றோம். தயங்காமல் எழுதுங்கள். 
                                                              நன்றி
                                                                                                                                                                                                                 மன்னார் மைந்தன்