Wednesday, May 30, 2018

நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும்

நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் செவிசாய்க்காது தாம் விரும்பியவாறு செயட்படுவதை மக்கள் பிரதிநிதி என்றவகையில் எம்மால் ஏற்க முடியவில்லை 
கட்சி ரீதியாகவும் அதைவிட சில சமூகங்களை மாத்திரம் திருப்தி படுத்தியும் ஏனைய சமூகங்களை பாதிக்கும் விதமாகவும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கிறார்கள் 
எமக்கு வந்த வேலை திட்டங்களை தடுக்கும் விதமான இவர்க்ளின் வஞ்சக மனப்பான்மையை நினைத்து வேதனையடைகிறேன் 
ஒன்று மட்டும் உறுதி இவர்கள் என்னதான் செய்தலும் இறைவனின் ஆசியோடு எமது அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் இல்லையேல் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் நிலையில் உளேன் 
குறிப்பாக கட்சிபேதங்களுக்கு அப்பால் உண்மையின் நீதியின் பக்கம் செயட்படும் சக உறுப்பினர்களான றோஜன் அண்ணா,ஜீவன் அண்ணா,ஞானம் அண்ணா,ரஞ்சன் அண்ணா,மணி அக்கா,சந்திரிகா அக்கா,ஜென்சி அக்கா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும் 
மேலும் எம்மீது அநீதி கட்டவிழ்த்து விடப்படும் பட்ச்சத்தில் ஊடக சந்திப்புகளை நடத்தி உண்மைகளை சொல்வதோடு சத்தியாகிரகத்தையும் முன்னெடுக்கவும் தயாராக உள்ளோம்


Tuesday, May 22, 2018

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு எடுத்த முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முறியடித்துள்ளார்.

Pratheepan Theenu shared a post.
2 hrs
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
2 hrs
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு எடுத்த முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முறியடித்துள்ளார்.
========================================
நேற்றைய தினம் முசலி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது.இக் கூடத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டது.
1984ம் ஆண்டு கொக்குப்புடையன் கிராமத்தின் வரைபடத்துக்குள் உள்வாங்கபட்ட மேற்படி காணியை 2012ம் ஆண்டு அரசியல் வாதிகளின் துணையுடன் பிரதேச செயலாளருடன் இணைந்து நிள அளவை திணைக்களத்தினர் முறையற்ற விதத்தில் சிலாவத்துறை மக்களுக்கு பகிர்ந்தளித்தனர்.
கடந்த 13.04.2018 அன்று அக் காணிக்குள் தற்போது காணி முறையற்ற விதத்தில் பகிர்ந்தளிகபட்டுள்ள சிலாவத்துறை மக்களுக்கு வீடுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெறுவதாக மக்களால்பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு இக் காணி விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.உடனடியாக அந் நிகழ்வை 21.05.2018 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்தார்.
அதன் பிரகாரம் நேற்றைய முசலி அபிவிருத்தி குழு கூட்டத்தில் இக் காணி பிணக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனிலால் தீர்மானம் கொண்டுவரபட்டது.
முறையற்ற விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுள்ள இக் காணியை மத்திய,மாகாண காணி ஆணையாளரின் அனுமதியை பெற்று மீள கொக்குப்புடையான் மக்களுக்கு வழங்குவதற்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்தார்.
இத் தீர்மானத்தை அமைச்சர் ரிஷாத் பதியூன் தான் எதிர்பதாகவும்.இக் காணிகள் சிலாவத்துறை
மக்களுக்கு உரித்தான காணிகள் என்றும் குறிப்பிட்டதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
உடனடியாக பிரதேச செயலாளருடன் அவ் இடத்துக்கு சென்று நிலைமைகளை பார்வையிடப்பட்டதுடன் மதிய,மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனைகள் பெற்று முடிவெடுப்பது என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கொக்குப்புடையான் மக்கள் காலகாலமாக இக் காணிகளுக்குள் பயிர்கள் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தகதாகும்.