Sunday, December 3, 2017

பெரஸ்டொரிக்கா அதாவது சோவியத் மறு சீரமைப்பும் திருத்தந்தை புனித ஜோன் போல் 2 அவர்களும்!

பெரஸ்டொரிக்கா அதாவது சோவியத் மறு சீரமைப்பும் திருத்தந்தை புனித ஜோன் போல் 2 அவர்களும்!

அன்பர்களே! எமது சமகால மாமனிதர்களுள் புனிதர் என்ற நிலைக்கு கிடு கிடு என உயர்த்த பட்டவர்கள் இருவர் ஒன்று அன்னை திரேசா மற்ற து திருத்தந்தை புனித ஜோன் போல் அவர்கள் இந்த இருவருமே இலங்கை மண்ணை தரிசி த்தவர்கள். அன்னை திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழக்கப்பட்டதில் சகல உலக மக்களும் வரவே ற்றார்கள் ஆனால் திருத்தந்தை புனித ஜோன் போல் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட தில் பலர் முகம் சுழித்துக்கொண்டார்கள், பல பத்திரிகைகள் தொடர்பு சாதனங்கள் தமது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். குறிப்பாக கம்யூனிஸ ஆதரவர்கள் திருத்தந்தையை அடியோடு வெறுத்தார்கள். அவரை கொலை செய்யுமளவுக்கு துருக்கி நாட்டு அலி அக்கா என்ற இளைஞன் துணிந்து செயல்பட்டான். தன்னை கொலை செய்ய துணிந்த அலி அக்காவை மன்னித்து அவனை சிறையில் சந்தித்தார் புனித ஜோன் போல் அவர்கள், உலகமே இதைக்கண்டு வியந்து நின்றது.

அப்படி இவரை கொலை செய்யும ளவுக்கு சோவியத் கம்யூனிஸ்ட்டு க்களுக்கு ஏன் அக்கறை என்பதை அலச முற்பட்டால் பெரஸ்டொ ரிக்கா அதாவது சோவியத் அரச பொருளாதார மறு சீரமைப்பு என்ற விடயம் முன்னுக்கு வருகின்றது இந்த பெரஸ்டொரிக்கா மறுசீர மைப்புக்கு முன்னோடியாக திகழ்வது சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபராக இருந்த மிக்கல் கோப்பர்சேவ் அவர்களின் அரசியல் சிந்தனை அதனை கிளஸ்நொஸ்ட் Glasnost என்று அழைப்பார்கள், மிகிந்தாவின் சிந்தனை என்று உருவகப்படுத்தலாம்!
Perestroika (Russian: Перестро́йка, IPA , was a political movement for reformation within the Communist Party of the Soviet Union during the 1980s until 1991 widely associated with Soviet leader Mikhail Gorbachev and his glasnost (meaning "openness") policy reform. The literal meaning of perestroika is "restructuring", referring to the restructuring of the Soviet political and economic system. சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட நாள் முதல் எட்டு
அதிபர்கள் அந்த பதவியை அலங்கரித்தனர் அதில் இறுதியாக இருந்தவர் அதிபர் மிக்கல் கொப்பர்சேவ், 1991 ஆண்டு மார்கழி 26 திகதி சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் உச்ச நீதிம ன்றத்தின் ஆணைப்படி சோவியத் ஒன்றியம் களைக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, அதிபர் மிக்கல் கொப்பர்சேவ் அவர்கள் தனது பதவியை துறந்து, சகல் அதிகாரங்கள், சோவி யத் அணு ஏவுகனைகளின் இரகசிய குறியீட்டு இலக்கம் உட்பட அனை த்தையும் ருஸியா அதிபர் போரிஸ் யல்ஸ்டீனிடம் ஒப்ப்டைத்தார்.
                                                        சோவியத ஒன்றியத்தின் சிதைவை புனித ஜோன் போல் அவர்கள் மனதார ஏற்றுக்கொண்டாரா? அல்லது உயர்ந்த கம்யூனிஸ சிந்தாந்தங்களுக்கு அவர் எதிர்ப்பாளராக
இருந்திருக்கின்றாரா? என்ற பல கேள்விகள் நமது மனத்திரையில் எழும்பக்கூடும்! இங்கு தான் தத்துவார்த்த முரண்பாடுகளை புரிந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. உண்மையில் இயேசு கிறிஸ்து கம்யூனிச அதாவது சமதர்ம கோட்பட்டை நிராகரித்தாரா? என்ற கேள்வி முன் எழுகின்றது? இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் பூர்சுவா எண்ணம் கொண்ட யூத மதலைவர்களை மன்னர்களை, பிரபுக்களை, பரிசேயர்களை, சதுசேயர்களையும் அவர்களது மனிதாபிமானமற்ற செயல்களையும் வெளிப்படையாக கண்டித்தார். அதற்காகவே அவரை அரசியல் சமூக குற்றவாளியாக சிருஸ்டித்து சிலவையிலே அறைந்து கொலை செய்தார்கள்.
                                                        
ஐரோப்பாவில் மத்திய இருண்ட‌ காலத்தில், கிறிஸ்தவ மதம், அரசியல் அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அதிகார சுக போகங்களை திருத்தந்தைமார்கள் ஆயர்கள் துஸ்பிரயோகம் செய்தார்கள். தமது கொள்கைகளுக்கு எதிர்ப்பாக இருக்ககோடிய அத்தனை அறிவியல் சிந்தனைகளை அழித்தனர், புதுமையாக சிந்தித்தவர்களை கொலை செய்தனர். பூமி உருண்டை என்று சொன்ன கொபர்னிகஸை எரியூட்டி கொலை செய்தனர். கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பீடத்தின் பிற்போக்கு எண்ணங்களை அப்போதைய கம்யூணிஸ்டுகள் அடியோடு வெறுத்தனர் இந்த கசப்பான உணர்வுகள் தான் கம்யூனிஸ நாட்டில் மதங்களுக்கு தடைவிதிக்க காரனமாக இருந்தது.
                                                    நாளடைவில் கத்தோலிக்க திருச்சபையானது தன்னைத்தானே சுத்திகரித்துக்கொண்டு, மக்களை முதன்மைபடுத்தி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தது, அறிவியல் எண்ணங்களை கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் அணுக முற்பட்டது, சகல மதங்களின் தத்துவங்களை கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் உற்று நோக்கியது, கம்யூனிஸ்டுகளின் கசப்பான உணர்வுகளை களைந்து, அவர்களையும் அவர்களது நாட்டையும் இறைவான் பால் ஈர்க்கவேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை புதுமையாக எண்ணியது, அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் புனித ஜோன் போல் திருத்தந்தை அவர்கள். அவரது காலத்தில் போலாந்து நாட்டில் வலேஸா தலைமையில் தொழில் சங்கங்கள் இணைந்து ஆட்சியை கைப்பற்ற புனித தந்தை அவர்கள் உறுதுணையாக இருந்தார். அதுபோல சோவியத் ஒன்றியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, பனிப்போர் முடிவுக்கொண்டுவந்து உலகத்தில சமாதானம் ஏற்பட திருத்தை அவர்கள் அயராது பாடுபட்டார். இதற்காக வரலாற்று சிறப்பு மிக்க மல்டா சந்திப்பை அதிபர் மிகல் கொப்பர்சேவ் அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டார். VATICAN CITY — Soviet President Mikhail S. Gorbachev on Friday promised full religious freedom in the Soviet Union during a meeting with Pope John Paul II in which the two leaders also agreed to restore formal diplomatic relations between the Holy See and the Kremlin.The Pope gave his blessing to the restructuring of Soviet society going on under Gorbachev's program of perestroika, or reform and restructuring, during their historic encounter, which bridged the bitter chasm dividing Christianity and communism. Gorbachev invited the Pope to visit the Soviet Union. And John Paul, noting improvement in the religious climate there under perestroika, said he hoped that further developments would allow him to make a long-awaited visit.The Soviet president, dressed in a black suit, and the Pope, in his white robes, both seemed to enjoy the encounter of two sturdy Slavs, unabashed risk-takers who have emerged from opposite doctrinal poles to become two of the most compelling figures on the world stage today.
                                                        திருத்தந்தை அவர்கள் திருச்சபைக்குள் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். உலக அரசியல் விடயங்களில் தலையிட்டு உலக சமாதானத்திற்காக அரும்பாடுபட்டார். உலக அரசியல் அரங்கிலே திருந்தையின் எண்ணங்கள் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்டது. சகல உலக தலைவர்களும் திருத்தந்தை உளமார நேசித்தார்கள் என்பதற்கு அவரது மரண ஊர்வலமே சாட்சி அதுமட்டுமல்ல திருத்தந்தை அவர்கள் ஆயராக போலாந்து நாட்டில் கிராகோவ் நாட்டில் வாழ்ந்த போது ஏழை எளிய மக்களுடன் மிக எளிமையான‌ முறையில் வாழ்ந்திருக்கின்றார். நான் இரண்டு தடவை கிராகோவ் நகருக்கு சென்று திருத்தை பற்றி பலதகவல்களை அந்த நகரத்து மக்களிடம் இருந்து கேட்டறிந்தவைகளையே இன்று ஒரு கட்டுரை வடிவில் தருகின்றேன். திருத்தந்தை பற்றிய இன்னும் பல தகவல்களுடன் மீண்டும் உங்களை சந்திப்பேன்
. அன்புடன் பேசாலைதாஸ்



No comments:

Post a Comment