Saturday, October 10, 2020

விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்?

 

விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்? பேசாலைதாஸ்


விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசி யை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது, நமது கைபேசியின் மின்கலம் (பேட்டரி) வலுவிழக்கும், விமான சிப்பந்திகளின் பணிச் சுமை கூடும், இதர பயணிகளுக்கு அசவுரியமாக இருக்கும்.

ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.

பேசிக்கொண்டே நாம் வாகனத்தில் பயணித்துக்கும் பொழுது நமது கைபேசி பேட்டரி விரைவாக முடிவதற்கு இதுவே காரணம்.

ஒவ்வொரு கைபேசியின் தகவல் தொடர்பு (சிக்னல்) துண்டிக்கப்படும்போது, நமது கைபேசி அதன் சமிக்ஞையை அதிகரிக்கும் (boost its signal) இதனால் பேட்டரி சக்தி மேலும் அதிகமாக விரையமாகும்.

விமானம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட இடம் (confined space). இந்தமாதிரி ஒரு குழாயில் நம்மை ஆட்டுமந்தை போல் அடைத்துவைத்து தான் அழைத்துச்செல்கின்றனர்.

வரையறுக்கப்பட்ட ஒரு இடத்தில் சிலருக்கு எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது. இன்றும் நாம் பேருந்தில்/ ரயிலில் பயணிக்கையில் அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பரவலாக நம்மால் காணமுடியும்.

விமானம் மேலெழும்பும் போதும், தரையிறங்கும் போதும், கைபேசியை அனைத்துவைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தியும், விமானம் ஓடுபாதையை அடையும் வரை கைபேசியை கீழே வைக்காத சிலரை நாம் இன்றும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

No comments:

Post a Comment